search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்"

    • நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார்.

    காங்கயம்:

    காங்கயம், உடையார் காலணி, பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வசிப்பவர் மல்லிகார்ஜூனன். இவர் காங்கயத்தில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை செயது வருகிறார். இவரது மனைவி சித்ரா(வயது 25). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். மதியம் 2மணிக்கு மல்லிகார்ஜூனன் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    • பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
    • கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார்

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் கூட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகி அட்சய கண்ணன், மாநில விவசாய அணி தானு பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச்செயலாளர் பகவதியப்பன் மற்றும் தோவாளை பகுதியை சேர்ந்த விவசாய அணி முத்துசாமி, சிவச்சந்திரன், ராஜேந்திரன், மது, ராஜன், சரிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
    • தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்றுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி கனகா (வயது 30). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    நேற்று கனகா வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்று கீரை பறித்துக் கொண்டிருந்தார் அப்போது கீழே இருந்த பாம்பு கடித்து விட்டது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கொண்டு போய் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி கனகா இன்று அதிகாலை இறந்துவிட்டார். புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்
    • வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஜெயபாரதி மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மணிகண்ட பிரபு அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இச்சம்பவம் குறித்து மணிகண்ட பிரபு வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    • தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி
    • அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation

    • ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
    • ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    திரு.வி.க.நகர்:

    சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரேகா (வயது 26). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தார். சென்னை புத்தகரம் அருகே வந்தபோது திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தகாத வார்த்தைகளால் பேசி ரேகா வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகாவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குடிபோதையில் போலீசாரையும் அவர் தரக்குறைவாக பேசியதோடு, பெண் போலீஸ் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த பேட்ச் மற்றும் செல்போன் 'ஹெட்செட்'டை அறுத்து ரகளை செய்தார்.

    மேலும் அவர் போலீசாரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    போதையில் ரகளை செய்த ரேகா, தான் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    • திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சியாம் கணேசை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலபாலையத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது21). இவர் வத்திரா யிருப்பு போலீசில் புகார் அளித்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கார்மெண்டில் வேலை பார்த்து வந்தேன். அப் ேபாது தெற்கு தெருவை சேர்ந்த சியாம் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. தன்னை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி சியாம்கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்ப டையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வ தாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சியாம் கணேசை தேடி வருகின்றனர்.

    • திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர்
    • திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    நாகர்கோவில் :

    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் மரியசானு (வயது 23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு வருகிற 18-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மரியசானு நேற்று கன்னியாகுமரி புதுகிராமம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு அங்கேயே தங்கினார். இந்நிலையில் வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் 30 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்துடன் மரியசானு மாயமாகிவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் செல்வலட்சுமி. இவரது 32 வயது மகள் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செல்வலட்சுமி அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வருகிற 27-ந் தேதி கோவையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தார். செல்வலட்சுமி அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த் தும் பலனில்லை. இதற்கி டையே சகோதரியின் கணவரிடம் செல்போனில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு போனை அணைத்து வைத்து விட்ட தாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்வலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மற்றொரு சம்பவம்

    நரிக்குடி அருகே உள்ள புரையறைவாசித்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மணி. இவரது மனைவி லாவண்யா(25). குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லாவண்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பிச்சை மணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
    • ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.
    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா (21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து ம் குணமாகததால் சம்பவத்தன்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
    • பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் மீனா (22). இவருக்கும் இவரது சகோதரிக்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மீனா வீட்டில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதை கண்ட பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×