search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits suicide by drinking poison"

    • தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.
    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா (21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து ம் குணமாகததால் சம்பவத்தன்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.பி.பி.நகர் ஜனதா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 58). நகைப்பட்டறை தொழிலாளி. இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதனால் அவர் நான் உயிருடன் இரு ந்து என்ன பயன்? என்று புலம்பி வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

    சம்பவத்தன்று நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார். பிறகு அவர் வேலை செய்த நகை ப்பட்டறையில் சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் நாகேந்திரனை தேடி நகைப்பட்டறைக்கு சென்ற அவரது மகன் சந்திரபிரகாஷ் தனது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் விஷத்தை குடித்து விட்டதாக நாகேந்திரன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை சந்திரபிரகாஷ் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாகேந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    எனினும் சிகிச்சை பலனளி க்காமல் நாகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.
    • சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சேகர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குணமடைந்து கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி செம்புளிசாம்பாளையம் நடராஜ் தோட்டத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (30). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.

    சிவகுமாருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தீபா என்கிற தீபலட்சுமி என்ற மனைவியும், கிஷோர் ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பு கள்ளிப்பட்டியில் வசித்துக் கொண்டு பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளார். இதில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் இத்தொழிலை கை விட்டுள்ளார்.

    தற்பொழுது சிவக்குமார் தனது தந்தை வீட்டுக்கு பக்கத்தில் மனைவி குழந்தை–யுடன் இருந்து வசித்து வந்தார். சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு–கிறது.

    இந்நிலையில், சிவகுமாருக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் சிவக்குமார் வெளியில் சென்று வருவதாக மனைவி தீபாவிடம் சொல்லி விட்டு சென்றுள்ளார்.

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் சிவக்குமாரை தேடியுள்ளனர். இந்த நிலையில் சிவக்குமாரின் நண்பர் கள்ளிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் சிவக்குமாரின் உறவினர் சென்னியப்பன் என்பவருக்கு போன் செய்து சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சிவக்குமாரின் குடும்பத்தார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவக்குமார் இறந்து கிடந்ததை கண்டு உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
    • இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×