search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈத்தாமொழி அருகே திருமணம் நிச்சயமான இளம்பெண் 30 பவுன் நகையுடன் மாயம்
    X

    ஈத்தாமொழி அருகே திருமணம் நிச்சயமான இளம்பெண் 30 பவுன் நகையுடன் மாயம்

    • திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர்
    • திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    நாகர்கோவில் :

    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் மரியசானு (வயது 23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு வருகிற 18-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மரியசானு நேற்று கன்னியாகுமரி புதுகிராமம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு அங்கேயே தங்கினார். இந்நிலையில் வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் 30 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்துடன் மரியசானு மாயமாகிவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Next Story
    ×