search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் இளைஞர்-இளம்பெண் பாசறை அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
    X

    தோவாளையில் இளைஞர்-இளம்பெண் பாசறை அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

    • பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
    • கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார்

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் கூட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகி அட்சய கண்ணன், மாநில விவசாய அணி தானு பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச்செயலாளர் பகவதியப்பன் மற்றும் தோவாளை பகுதியை சேர்ந்த விவசாய அணி முத்துசாமி, சிவச்சந்திரன், ராஜேந்திரன், மது, ராஜன், சரிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×