என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே கல்லூரிக்கு சென்ற இளம்பெண் மாயம்
- ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்
- வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஜெயபாரதி மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மணிகண்ட பிரபு அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இச்சம்பவம் குறித்து மணிகண்ட பிரபு வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.
Next Story






