என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குடிபோதையில் போலீசாரிடம் ரகளை செய்த இளம்பெண்
- ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
- ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திரு.வி.க.நகர்:
சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரேகா (வயது 26). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தார். சென்னை புத்தகரம் அருகே வந்தபோது திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தகாத வார்த்தைகளால் பேசி ரேகா வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகாவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குடிபோதையில் போலீசாரையும் அவர் தரக்குறைவாக பேசியதோடு, பெண் போலீஸ் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த பேட்ச் மற்றும் செல்போன் 'ஹெட்செட்'டை அறுத்து ரகளை செய்தார்.
மேலும் அவர் போலீசாரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
போதையில் ரகளை செய்த ரேகா, தான் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்