search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்கொலை"

    • சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது
    • சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கொண்டு வன் ரெட்டியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). இவரது மனைவி சம்பூரணம். அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சின்னத்திரை மிகவும் கஷ்ட ப்பட்டு வந்துள்ளார். இத ற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சம்பவத்தன்று சின்ன துரை மற்றும் அவரது மனைவி, மகன் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தனர். பின்னர் சின்னதுரை மட்டும் வீட்டு க்கு வந்தார்.

    அன்று இரவு தனது மனைவிக்கு போன் செய்த சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகன் மற்றும் உறவினருடன் சென்று சின்னதுரையை மீட்டு சிகி ச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் அனும தித்தனர்.

    அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்த தால் பின்னர் மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழை த்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் சின்னதுரை வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு
    • பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தருமன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது19).

    இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரை நேற்று மாலை கல்லூரி தேர்வில் மதிபெண்கள் குறைவாக வாங்கி யுள்ளதால் அவரது பெற்றோர்கள் திட்டி யுள்ளனர்.

    இதனால் மன உளைச்ச லடைந்த மாணவி லோகேஸ்வரி இரவு வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த பொழுது லோகிஸ்வரி இறந்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீ சாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஸ்வரியின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலம் மகன் சிவக்குமார் (வயது 42). இவர் தறி ஓட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி கலாமணி (36). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. இவ ர்களுக்கு குழந்தை இல்லை.

    சிவகுமார் நீண்ட நாட்க ளாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததால் மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததாலும், தனக்கு குழந்தை இல்லாததாலும் மனவேதனையில் இருந்த சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.

    இதையடுத்து உறவின ர்கள் அவரை மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நி லையில் அங்கு சிகிச்சை பெ ற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி கலாமணி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வராஜ் (55). கூலி தொழிலாளி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
    • மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தளிகை பொய்யேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள், 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

    இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதிக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக பொய்யேரி பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் மது வாங்கி குடித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார். இதனிடையே ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டு விஜய் வீட்டிற்கு வந்தபோது செல்வராஜ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் விஷம் குடித்து இருந்ததாகவும், வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.
    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா (21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து ம் குணமாகததால் சம்பவத்தன்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கரியானூர், காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த சந்திரமதி என்பவரின் மகள் கிருத்திகா (20). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஈரோடு மாணிக்கம்பாளை யம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையுள்ளது.

    கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு கார ணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவ த்தன்று கணவன், மனைவி க்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திரும ணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    • மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முனபு இறந்து விட்டார்

    பென்னாகரம் அருகே

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரகாசன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புரு (வயது70). இவரது மகன் பழனிசாமி.

    இந்த நிலையில் சுப்புரு வின் மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முனபு இறந்து விட்டார். இதன் காரணமாக சுப்புரு துக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மதியம் சுப்புரு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட பழனிசாமி அவரது தந்தையிடம் கேட்டபோது விவசாயப் பயிர்களுக்கு பயன்படுத்தும் விஷம் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சுப்புருவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.பி.பி.நகர் ஜனதா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 58). நகைப்பட்டறை தொழிலாளி. இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதனால் அவர் நான் உயிருடன் இரு ந்து என்ன பயன்? என்று புலம்பி வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

    சம்பவத்தன்று நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடி த்தார். பிறகு அவர் வேலை செய்த நகை ப்பட்டறையில் சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் நாகேந்திரனை தேடி நகைப்பட்டறைக்கு சென்ற அவரது மகன் சந்திரபிரகாஷ் தனது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் விஷத்தை குடித்து விட்டதாக நாகேந்திரன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை சந்திரபிரகாஷ் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாகேந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    எனினும் சிகிச்சை பலனளி க்காமல் நாகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சியின் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சக்திகுமார் (வயது 39) இருந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு சஞ்சய் (14) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் சக்திகு மார் உடல்நிலை சரியில்லா மல் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்றும் வந்தார். இதன் காரணமாக சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சக்தி குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தங்க மேடு தம்பி கலை அய்யன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் குணசேகரன் என்ற பேச்சியப்பன் (வயது 55). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமினில் வெளியே வந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் அம்மாபேட்டை போலீஸ் நிலை யத்தில் தினமும் கையொப்பமிட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று சிறைக்கு சென்றதை நினைத்து மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் இதுகுறித்து அவ ரது மனைவி பழனிய ம்மாள் காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவக்குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதுரை சேர்ந்தவர் ராஜன் மகன் சிவகுமார் (வயது 50). இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்த சிவக்குமார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் அய்யாசாமி சூர்யா திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்தி கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சில்லி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கார்த்தி அவரது அண்ணன் கணேசனுடன் சத்தியமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். கார்த்திக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடும் வயிற்று வலியின் காரணமாக கார்த்தி கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது அண்ணன் கணேசன் கார்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×