search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laborer commits suicide by"

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த துடுப்பதி, கருமாண்டி செல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). இவரது மனைவி பரிமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடிப்ப ழக்கம் காரணமாக மூர்த்தி க்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி வரும்போதெல்லாம் தான் இறந்து விட போவதாக மூர்த்தி கூறிவந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். 

    • ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

    ×