search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ"

    • மதுரை கே.கே.நகரில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
    • ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (51). கே.கே.நகர் பகுதியில் சொந்த வேலை காரணமாக மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆறுமுகம் சென்றார்.

    அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரே பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. சுந்தரம் பார்க் அருகே வந்தபோது எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் ஆட்டோ வின் குறுக்கே வந்துள்ளது. இதனால் பிரேக் அடித்து ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    ஆனால் ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் மீனாட்சிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
    • 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றி வருபவர்களுக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல் லச்சாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அதிக மாணவிகள் இருந்தது தெரியவந்தது.

    மாணவிகள் ஒவ்வொரு வரும் மடியில் இருந்தவாறு பயணம் செய்தனர். ஒரே ஆட்டோவில் 9 கல்லூரி மாணவிகள் இருந்தனர். 3 பேர் பயணம் செய்ய வேண்டிய ஆட்டோவில் 9 பேர் பயணம் செய்ததையடுத்து ஆட்டோ டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    ஏற்கனவே இவருக்கு அதிக மாணவிகளை ஏற்றி வந்ததாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் நகர் முழுவதும் ஹெல்மெட் சோதனை யிலும் போலீசார் ஈடுபட்ட னர். மணிமேடை, வடசேரி, கோட்டார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை களில் ஹெல்ெமட் அணி யாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    பெண்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். இன்று சுமார் 50-க்கும் மேற்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நோ பார்க்கிங் கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கோவில், வீட்டில் கொள்ளை நடந்தது.
    • ஆட்டோவை களவாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெரு–வில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

    இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி பிச்சை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி இரண்டு சிறுவர்களை கைது செய் தனர்.

    வீடு புகுந்து திருட்டு

    மதுரை தல்லாகுளம் ராதாகிருஷ்ணன் ரோடு உழவர் சந்தை பகுதியில் வசிப்பவர் ரோஷன் பானு (23). இவர் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் வைத்தி–ருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை திருடப்பட்டி–ருந்தது.

    இந்த சம்பவம் குறித்து ரோஷன் பானு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    மதுரை திருப்பாலை உச்சபரம்பு மேடு ஜானகி அம்மாள் தெருவை சேர்ந்த–வர் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி (32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு மருத்துவம–னையை அடுத்த கேண்டீன் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.

    இவர் அருகில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த ஆட்டோ திருடு போயி–ருந் தது. இதுகுறித்து முத்துப்பாண்டி அரசு மருத்து–வமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட் டோவை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இதில் பெத்தானியாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (42), தத்தனேரி சிவ–காமி நகர் கணேஷ்குமார் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிச்சென்ற ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 2 நாளில் ரூ.5 லட்சம் வசூலானது
    • சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகி றார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் நாகர்கோவில் நகரில் மட்டும் 238 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதன் மூலமாக ரூ.3 லட்சம் வசூலானது. இந்த நிலையில் நேற்றும் போலீ சார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சோதனை நடத்தியபோது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற பலரை போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களும் சிக்கினார்கள். ஆட்டோக்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    அதிக மாணவிகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரை வரின் லைசென்ஸை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். வடசேரி, கோட்டார், கலெகடர் அலுவலகம் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 12 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ரூ.2 லட்சம் வசூலானது. கடந்த 2 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. இன்று காலையில் போக்குவரத்து போலீசார் கேப் ரோடு, ராமன் புதூர் சந்திப்பு, வடசேரி பகுதி களில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல் சுசீந்திரம் போலீசார் ஆசிரமம் பகுதி யில் சோதனை மேற் கொண்டனர். குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ஹெல்மெட் சோதனை மேற்கொள்ளும் போலீசார் கனரக வாகனங்களில் கனிம வளங்களை அதிக அளவு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகைகார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர பஸ்கள் மட்டுமின்றி தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரி ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தனியார் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்பு மட்டுமின்றி இழப்பும் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன டாக்சியை அனுமதிப்பதால் ஆட்டோக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை. காப்பீடு செலுத்த முடியவில்லை. வாழ்க்கையை நடத்துவதே கடினமாகிவிட்டது. இதனால் 23 வெவ்வேறு வகையான தனியார் போக்குவரத்து வாகன சங்கங்கள் இணைந்து வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • பொதமக்களுக்கும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கும் வாய் தகராறு ஏற்படும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பவை வாடகை கார் மற்றும் ஆட்டோக்களாகும்.

    ஆனால் சில நேரங்களில் ஆட்டோ மற்றும் கார்களை பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    நீண்ட தூர பயணம் மற்றும் திரும்ப வரும் போது வாடகைக்கு யாரும் வர மாட்டார்கள் என்பது போன்ற காரணங்களை கூறி ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் முதலில் வருவதாக கூறி விட்டு பின்னர் வர மறுத்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்க வேண்டியது உள்ளது.

    அதன் பின்னர் வேறு வாகனங்களை பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்குள் மன அழுத்தத்தை சந்திக்கும் பொதமக்களுக்கு நேரமும் விரயம் ஆகிறது. இதனால் பொதமக்களுக்கும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கும் வாய் தகராறு ஏற்படும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் முதலில் சவாரிக்கு வருவதாக கூறி விட்டு பின்னர் வர மறுத்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்ட பிரிவான 178(3)-ன் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இனி சவாரிக்கு வருவதாக கூறி விட்டு பின்னர் வர முடியாது என்று கூறினால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக 90031 30103 மற்றும் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக ஆவடியை சேர்ந்த தினேஷ் என்பவர் கூறும்போது, பெரும்பாலும் கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சவாரி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நகரப் பகுதிகளில் இருந்து வருவது இல்லை.

    போலீசாரின் நடவடிக்கையால் வருவதாக கூறி விட்டு பின்னர் மற்றும் ஆட்டோ டிரைவர்களும், கார் டிரைவர்களும் சவாரிக்கு வருவதை இனி தவிர்ப்பதற்கு யோசிப்பார்கள். இது வரவேற்க கூடிய விஷயம்தான் என்று தெரிவித்தார். 15 கி.மீ. மேல் இருந்தால் அவ்வளவு தூரமா? என்னால் வர முடியாது என்று கூறும் டிரைவர்களும் உள்ளனர். போலீசாரின் நடவடிக்கையால் இந்த நிலையும் மாறும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

    • திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பு மினி பஸ் சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.

    இவற்றை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் போக்குவரத்துக்கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படுகிறது.

    • ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்.
    • இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம் 3000. இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற2-ந்தேதி பதவி யேற்க உள்ளார்.

    இதை முன்னிட்டு மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    எங்களது ரோட்டரி சங்கம் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொடுத்து இ-ஆட்டோ வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு சவாரி எடுக்கவும், ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் உயர ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருக்கும். 2024-ம் ஆண்டுக்குள் ரூ. 4 கோடி மதிப்பில் ஒரு சங்கத்துக்கு ஒரு ஆட்டோ வீதம் 127 ஆட்டோ ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு வழங்கப்படும்.

    சுகாதார வசதி இல்லாத மாணவிகள் பயிலும் அரசு பள்ளியை கண்டறிந்து கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும். 12 மாதங்களில் 12 திட்டங்கள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வருகிற 1-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மண்டல ஒருங்கிணைப் பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித் திரு திட்ட ஒருங்கிணைப் பாளர் மாதவன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
    • இவ்வாறு வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநா தன் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீர் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்தார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.

    பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.

    பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.

    இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

    • 2-வது முறை சிக்கினால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை
    • ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    பள்ளிகளுக்கு ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வரக்கூடாது. அவ்வாறு ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே ஆட்டோ டிரைவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்டனர். நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடங்கள் முன்பு போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் கேப் ரோட்டில் உள்ள பள்ளி முன்பு சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்களை போலீசார் பிடித்தனர். 3 ஆட்டோக்கள் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், நாகர்கோவில் நகரில் தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர். ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒரே ஆட்டோ 2-வது முறையும் அதிக குழந்தைகளை ஏற்றி வந்து சிக்கினால் அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்கபடும். எனவே ஆட்டோ டிரைவர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குழந்தைகளை ஏற்றி வர வேண்டும் என்றார்.

    • புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது.
    • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புதிய பஸ் நிலையம் சங்க ஆலோசகர் அண்ணாதுரை வரவேற்றார். ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், சி.ஐ.டி.யூ ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, மாநகரத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் மூர்த்தி, மக்கள் அதிகாரம் தேவா, புதிய பஸ் நிலையம் சங்கம் தலைவர் நாகலிங்கம், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சாமிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்த கூட்டத்தில், கேரள மாநில அரசை போல் ஆட்டோ செயலியை உருவாக்கி அரசை ஏற்று நடத்த வேண்டும். தஞ்சை பெரிய கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய பஸ் நிலையம் ஆட்டோ சங்கம் கருணாகரன், வழக்கறிஞர் சண்முகநாதன், அனைத்து வாகன ஓட்டுனர் சங்க பேரவை பழனிச்சாமி, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதிய பஸ் நிலையம் ஆலோசகர் குப்புசாமி நன்றி கூறினார்.

    ×