என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- 2 நாளில் ரூ.5 லட்சம் வசூலானது
- சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகி றார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் நாகர்கோவில் நகரில் மட்டும் 238 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் மூலமாக ரூ.3 லட்சம் வசூலானது. இந்த நிலையில் நேற்றும் போலீ சார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சோதனை நடத்தியபோது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற பலரை போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களும் சிக்கினார்கள். ஆட்டோக்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதிக மாணவிகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரை வரின் லைசென்ஸை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். வடசேரி, கோட்டார், கலெகடர் அலுவலகம் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 146 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 12 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ரூ.2 லட்சம் வசூலானது. கடந்த 2 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. இன்று காலையில் போக்குவரத்து போலீசார் கேப் ரோடு, ராமன் புதூர் சந்திப்பு, வடசேரி பகுதி களில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.
இதேபோல் சுசீந்திரம் போலீசார் ஆசிரமம் பகுதி யில் சோதனை மேற் கொண்டனர். குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ஹெல்மெட் சோதனை மேற்கொள்ளும் போலீசார் கனரக வாகனங்களில் கனிம வளங்களை அதிக அளவு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்