search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் பவார்"

    • மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
    • மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்

    2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.

    2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் தனியாக செயல்பட்டு வருகிறார்
    • அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

    அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

    நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று சரத் பவார் தெரிவித்து வருகிறார். அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என்று அஜித் பவார் தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே இருதரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வருகிற 6-ந்தேதி (அக்டோபர்) இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அன்றைய தினம் இருதரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் சரத் பவார் பிரிவுக்கும், அஜித் பவார் பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் "எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்'' என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்தது மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக...
    • அனைத்து மக்களையும் பாதுகாப்பதுதான் எங்களது பணி

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பீட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அஜித் பவார், பேசியபோது "நாங்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசில் இணைந்தது, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான். நாங்கள் இந்த முடிவை மாநில வளர்ச்சிக்காக எடுத்தோம்.

    அரசியலில், நிரந்தர எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. நாங்கள் மகாயுதி கூட்டணியில் உள்ளோம். எங்களுடைய பணி அனைத்து சாதி மற்றும் மத மக்களை காப்பாற்றுவதுதான். இதை மகாராஷ்டிர மாநிலத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.

    நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக பணிபுரிவோம். நிலத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. நீர்வளத்துறை மந்திரியாக இருக்கும்போது இதற்கான ஏராளமான பணிகளை செய்துள்ளேன்" என்றார்.

    • அஜித் பவார் தலைமையிலான குழு தனியாக இயங்கி வருகிறது
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என சரத் பவார் உறுதியாக கூறுகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரசியலில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சரத் பவாரே, தனது கட்சியை தக்கவைத்துக் கொள்வதில திண்டாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சி பிளவுப்படும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அதிகமாக யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும்.

    ஆனால், சரத் பவார் எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சிகள் என்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சில எம்.எல்.ஏ.-க்கள் விலகியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் அரசியல் கட்சி என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடைய பெயர்கள் கூறி, பிரிந்து சென்றவர்களுக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

    நேற்று சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. அஜித் பவார் அதன் தலைவராக தொடர்கிறார்'' என்றார்.

    இதற்கு முதலில் பதில் அளித்த சரத் பவார், ''இந்த விசயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை'' எனக் கூறியிருந்தார். பின்னர், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

    கடந்த ஜூலை 2-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டசபை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மந்திரிசபையில் இணைந்தனர்.

    • சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தது கூட்டணியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
    • சரத் பவார் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பதாக வதந்தி வெளியானது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார்.

    இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக சந்தித்துள்ளனர். முன்னதாக ஒருமுறை சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசிய சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.

    ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.

    சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.

    சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன.

    இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நானா பட்டோல் கூறியதாவது:-

    இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை'' என்றார்.

    • சரத் பவாருடன் அஜித் பவார் ரகசிய சந்திப்பு
    • அண்ணன் மகனை சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார் சரத் பவார்

    மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்தன. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை கைப்பற்றி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.

    சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பூசலை உண்டாக்கிய அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வருகிறது. துரோகி என்ற அளவிற்கு அஜித் பவாரை சாடினார் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.

    சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். கட்சி பிளவுக்குப் பிறகு ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் ரகசியமாக சந்தித்தது மகாராஷ்டிரா அரசியலில் பேசும்பொருளாக உருவெடுத்தது.

    சந்திப்பு குறித்து சராத் பவார், தனது அண்ணன் மகனான அஜித் பவாரை சந்திப்பதில் தவறு இல்லை. ஒருபோதும் பா.ஜனதாவில் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் கட்சி பத்திரிகையான சாம்னா, சரத் பவார் தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், அதில் ''அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாரை சந்திப்பதை பார்க்க நகைப்புக்குரியதாக உள்ளது. அவர் அதை தவிர்க்கவில்லை.

    பா.ஜனதாவின் சாணக்கியர் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து அஜித் பவரை சரத் பவாருடன் சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், இதுபோன்ற சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இது நல்லது அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து துணை முதல்வரானார் அஜித் பவார்
    • அஜித் பவார், சரத் பவார் ஆகியோருக்கு எத்தனை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு என்பது உறுதியாக தெரியவில்லை

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    இதனால் சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

    பா.ஜனதா- ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களுக்கு முன் எழுந்தது. பின்னர் அவர்தான் நீட்டிப்பார் என பா.ஜனதா உறுதியாக கூறியதால், அந்த பிரச்சனை அப்படியே அமர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று சரத் பவார்- அஜித் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இந்த சந்திப்பு புனேவில் உள்ள தொழில் அதிபர் அதுல் சோர்டியா பங்களாவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமேல் மிட்கரி கூறுகையில் ''இரு தலைவர்களுடைய சந்திப்பு, குடும்பம் தொடர்பானதாக இருந்திருக்கும்'' என்றார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பட்கால்கர் ''இதுகுறித்து ஜெயந்த் பாட்டீல் மற்றும் பவார்களிடம், சந்திப்பு குறித்து கேட்டால் சிறந்ததாக இருக்கும்'' என்றார்.

    தேசியவாத காங்கிரசில் 54 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் சரத் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

    சிவசேனா கட்சியில் இருந்து 40 எல்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து துணை முதல்வராகியுள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது
    • உலகளவில் மோடி போன்று யாரும் புகழ் பெறவில்லை

    பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவாரும் கலந்து கொண்டார்.

    அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் ''ராஜீவ் காந்தி மிஸ்டர் க்ளீன் எனறு அழைக்கப்பட்டார். பிரதமர் மோடியும் அதே நற்பெயரை பெற்றுள்ளார்.

    பிரதமர் மோடியுடன் அணிவகுத்து சென்ற வாகனத்தில் நானும், தேவேந்திர பட்னாவிஸும் ஒரே காரில் சென்றோம். அப்போது கருப்புக்கொடி ஏந்தி யாரும் போராட்டம் நடத்தியதை பார்க்கவில்லை. சாலைகளின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நினறு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    சட்டம்-ஒழுங்கு பார்வையில் இருந்து எந்தவொரு பிரதம மந்திரியாக இருந்தாலும் சிறந்த சூழ்நிலை நிலவ வேண்டும் என நினைப்பார்கள். மணிப்பூரில் நிகழ்ந்ததற்கு யாரும் ஆதரவு அளிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியும் கவனத்தில் எடுத்துள்ளார். அங்கு நடந்ததை அனைவரும் கண்டித்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் வீட்டில் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, அவர் நாட்டின் எல்லையில் வீரர்களுடன் கொண்டாடினார்.

    கடந்த 9 வருடங்களாக நான் அவரது பணியை பார்த்துக்கொண்டு வருகிறேன். சர்வதேச அளவில் அவரைப் போன்ற எந்த தலைவரும் புகழ்பெற்றது கிடையாது. இது உண்மையிலும் உண்மை. நான் வளர்ச்சியை விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் போராட்டம், பேரணிகளை நடத்தலாம். ஆனால் முடிவு அதிகாரத்தில் உள்ளது'' என்றார்.

    • அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
    • அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர்.

    அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.

    இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம்  மனு அளித்தனர்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தனர்.
    • சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தனி அணியாக பிரிந்தார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் சரத்பவரால் நிறுவப்பட்ட தேசியவாத கட்சி பிளவுபட்டது.

    இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாகாலாந்தில் உள்ள ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும்  அஜித் பவார் பக்கம் சென்றது. சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது. ஷிண்டே இறுதியில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ந்ததும், கட்சியை உடைத்து தனியாக பிரிந்த ஷிண்டே, பாஜகவுடன் கைகோர்த்து புதிய அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பு
    • டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்பு

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.

    அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனியாக செயல்படுகிறார். அஜித் பவார் உடன் பிரபுல் பட்டேலும் சென்றுள்ளார். இவர்கள் தற்போது தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனக் கூறி வருகிறார்கள்.

    நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டார்.

    அதன்பின் பேசிய பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ''நானும், அஜித் பவாரும் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம். எங்கள் தரப்பில் இருந்து அஜித் பவார் கருத்துகளை முன்னெடுத்து வைத்தார்'' என்றார்.

    திங்கட்கிழமை காலையில் அஜித் பவார், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் சரத்பவாரை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரத் பவார் அவர்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

    சரத் பவார் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் அவரை பார்க்கச் சென்று, அவருடைய வாழ்த்தை பெறச் சென்றோம் என்றார் அஜித் பவார்.

    • துணை முதல்வராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் மற்றும் அணியினர் முதல் முறையாக சரத் பவாரை சந்தித்துள்ளனர்.
    • சரத் பவாரை மாநில செயலகம் 'மந்த்ராலயா' அருகே அமைந்துள்ள ஒய்.பி சவான் மையத்தில் சந்தித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    பின்னர், அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதுபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் அங்கிருந்து பிரிந்து ஆளும் கட்சியில் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், அஜித் பவார் மற்றும் அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் இன்று மும்பையில் என்சிபி தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளனர்.

    துணை முதல்வராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் மற்றும் அணியினர் முதல் முறையாக சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளனர்.

    அஜித் பவார் என்சிபி அமைச்சர்கள் ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், அதிதி தட்கரே மற்றும் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோருடன் சரத் பவாரை மாநில செயலகம் 'மந்த்ராலயா' அருகே அமைந்துள்ள ஒய் பி சவான் மையத்தில் சந்தித்தார்.

    என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத் ஆகியோரும் ஒய்.பி சவான் மையத்திற்கு விரைந்துள்ளனர்.

    ×