search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth arrested"

    • மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கழிக்குப்பம் கிராமத்தில் மேட்டு தெருவில் வசிப்பவர் கருணாகரன் (வயது 48). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் கழிகுப்பத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

    கருணாகரனிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் பாபு கூறுகையில், தடைசெய்யப்பட்ட கஞ்சா, சாராயம் போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • விஜயகுமார் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரி பாளையம் கிராமத்தில் உள்ள பாலகிருஷ்ணா தெருவில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 24). இவர் அந்த பகுதியில் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப், திவாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை செய்தனர். அப்போது விஜயகுமார் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து புதுவை மாநில 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
    • பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அடசல் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை என்கிர ஏகாம்பரம் (வயது 35). இவர் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் உள்ள காலிமனையில் பள்ளம் தோண்டி பூமிக்கு அடியில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் ஏகாம்பரம் வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதற்கு காரணமான ஏகாம்பரத்தை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஏகாம்பரத்தை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்ம் வெப்படையை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சுபாஷினிக்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவரது மனைவி சத்தியாவதி (49). இவர்களின் மகள் சுபாஷினி (28). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருக்கு சுபாஷினியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுபாஷினி வேலைக்கு சென்றார். அங்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் அப்பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    சில காலங்களுக்கு பிறகு இருவருக்குமிடையே தக ராறு ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எங்கும் கிடைக்காததால், சுபாஷினியின் அம்மா வீடான பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கத்திற்கு வெற்றி வந்தார். அங்கு இருந்த சுபாஷினி யின் பெற்றோரிடம் எனது மனைவி சுபாஷினி எங்கே என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த சத்தியாவதியின் வயிற்றிலும் குத்தியுள்ளார். மயங்கி விழுந்த இருவரையும் பொதுமக்கள் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கண்ணன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்து மின் மோட்டாரில் மின் வயரை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அக்கம், பக்கம் விசாரித்ததில் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூர்த்தி (37) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கண்ணன் மின் மோட்டாரில் இருந்து 15 மீட்டர் மற்றும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மின் மோட்டாரில் இருந்து 10 மீட்டர் மின்சார வயரை திருடியது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

    • பிரகாஷ் என்பவருக்கும் விஜிக்கும் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் ந டைபெற்றது.
    • திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை நேருஜி வீதியை சேர்ந்தவர் விஜி (33) .இவருக்கும் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்த பிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 23ம் தேதி அங்குசெட்டி ப்பாளை யத்தில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம்ந டைபெ ற்றது.இந்தநிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் திருமண நாள் பற்றி கேட்டுள்ளனர் . அப்போது மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும்வரதட்சனையாக 10 பவுன் கேட்டு அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக மணமகள் விஜியின் அண்ணன் கோவிந்தராசு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்துமகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி வழக்கு பதிவு செய்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிரகாஷ், மாப்பிள்ளையின் அண்ணன் முரளி, அண்ணிவச்சலா,தாய் தயாநிதிஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில்அடைத்தனர்.

    • நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே படந்தால் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பம் (வயது42). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது தனது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் தங்கச் செயினை கழற்றி கல்லாப் பெட்டி அருகே வைத்திருந்தார்.

    அந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் கடையில் வெற்றிலை பாக்கு கேட்டு வந்தார். அதை எடுக்க உள்ளே சென்று திரும்பிய அவர் கல்லாவின் அருகில் இருந்த 3 பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    எங்கு தேடியும் கிடைக்கா ததால் இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் நகையை திருடியது திருச்சி மாவட்டம் தொட்டி யம்பா ளையம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரசாந்த் (23) என்பவரை கைது செய்தனர்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்தனர்.
    • அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் பெண் ஒருவரை காதலித்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி கொடைக்கானல் அறையில் தங்கியும் மற்றும் பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாயார் மல்லிகா (55), மைத்துனர் சிவகுமார் (35) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    சிந்தாமணி வ.உ.சி. 2-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாது அருண்குமாருடன் சேர்ந்து அவருடைய நண்பர் அழகுமுத்துபாண்டி(21) என்பவரும் ஆபாசமாக பேசி சுரேசை தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து கீரைத்துரை போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.
    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    அப்போது மசாஜ் செய்வதாக கூறி ஆசையை தூண்டி சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள யாக்கோபுரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    • பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • பீகார் மாநிலத்தில் தன்வீர் கான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ராஞ்சி:

    பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நிறுவன அதிபரான தன்வீர் கானுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவர் மாடல் அழகியை விதவிதமாக ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது

    சில மாதங்களுக்கு முன்பு தன்வீர் கான் மாடல் அழகியை பாங்காங் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். மேலும் மாடல் அழகியை மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்தார்.

    இதுபற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் உள்ள ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் நண்பர் ஒருவர் அறிவுரை கூறியதால் அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.

    பின்னர் இது குறித்து மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால் மும்பை போலீசார் இந்த வழக்கை ராஞ்சிக்கு மாற்றினார்கள். போலீசர் தன்வீர் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    அவரை ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என அவர் போலீசில் தெரிவித்து உள்ளார். தன் நிறுவனத்தில் அந்த பெண் மாடலிங் தொழில் செய்து வந்ததாகவும், அவரால் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் என்னுடைய நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி வந்தார் என்று தன்வீர் கான் குறித்து போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் யார்? சொல்வது உண்மை என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
    • 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது

    கடலூர்:

    சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டு போனது. இதை தடுக்க ஏஎஸ்பி ரகுபதி உத்தரவின் பேரில் சிதம்ப ரம் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற் கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை போலீசார் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிதம் பரம் அருகே கீழமூங்கிலடி தையாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கேப்டன் பிரபா கரன் (வயது 35) என்றும், மேலும் அவர் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள் களையும் பறி முதல் செய்தனர். இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கேப்டன் பிரபாகரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×