search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் வாலிபர்"

    • பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • பீகார் மாநிலத்தில் தன்வீர் கான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ராஞ்சி:

    பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நிறுவன அதிபரான தன்வீர் கானுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவர் மாடல் அழகியை விதவிதமாக ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது

    சில மாதங்களுக்கு முன்பு தன்வீர் கான் மாடல் அழகியை பாங்காங் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். மேலும் மாடல் அழகியை மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்தார்.

    இதுபற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் உள்ள ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் நண்பர் ஒருவர் அறிவுரை கூறியதால் அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.

    பின்னர் இது குறித்து மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால் மும்பை போலீசார் இந்த வழக்கை ராஞ்சிக்கு மாற்றினார்கள். போலீசர் தன்வீர் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    அவரை ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என அவர் போலீசில் தெரிவித்து உள்ளார். தன் நிறுவனத்தில் அந்த பெண் மாடலிங் தொழில் செய்து வந்ததாகவும், அவரால் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் என்னுடைய நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி வந்தார் என்று தன்வீர் கான் குறித்து போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் யார்? சொல்வது உண்மை என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர்.
    • மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோ தமிழகத்தில் வாழ்ந்து வரும் வட மாநிலத்தினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மை இல்லை என்றும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் (வயது35) என்பவர் தான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது. போலி வீடியோ வெளியிட்டது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்பட 4 பேர் மீது பீகார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர். போலி வீடியோ பரப்பியது தொடர்பாக 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணிஷ் காஷ்யப் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இதனை தொடர்ந்து பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிஷ் காஷ்யப் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு தொடர்பாக கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் 3 நாள் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி கொடுத்தார். இதையடுத்து மணிஷ் காஷ்யப்பை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    போலீஸ் காவல் முடிந்த நிலையில் மதுரை கோர்ட்டில் நேற்று மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது விசாரணையில் மணிஷ் காஷ்யப் தகவல் எதுவும் சரியாக தெரிவிக்கவில்லை என்பதால், மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மணிஷ் காஷ்யப் தரப்பில் போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறப்படுவதால், மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மணிஷ் காஷ்யப்பை வருகிற 19-ந் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி டீலாபானு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய ஜெயிலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் இன்று பிறப்பித்தார்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மணிஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான உத்தரவு மதுரை மத்திய ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ×