என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் சாராயம் விற்ற வாலிபர் கைது
- விஜயகுமார் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரி பாளையம் கிராமத்தில் உள்ள பாலகிருஷ்ணா தெருவில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 24). இவர் அந்த பகுதியில் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப், திவாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை செய்தனர். அப்போது விஜயகுமார் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து புதுவை மாநில 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






