search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே  மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
    X

    சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

    • தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
    • 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது

    கடலூர்:

    சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டு போனது. இதை தடுக்க ஏஎஸ்பி ரகுபதி உத்தரவின் பேரில் சிதம்ப ரம் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற் கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை போலீசார் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிதம் பரம் அருகே கீழமூங்கிலடி தையாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கேப்டன் பிரபா கரன் (வயது 35) என்றும், மேலும் அவர் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள் களையும் பறி முதல் செய்தனர். இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கேப்டன் பிரபாகரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×