search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் செய்ய மறுப்பு"

    • பிரகாஷ் என்பவருக்கும் விஜிக்கும் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் ந டைபெற்றது.
    • திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை நேருஜி வீதியை சேர்ந்தவர் விஜி (33) .இவருக்கும் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்த பிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 23ம் தேதி அங்குசெட்டி ப்பாளை யத்தில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம்ந டைபெ ற்றது.இந்தநிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் திருமண நாள் பற்றி கேட்டுள்ளனர் . அப்போது மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும்வரதட்சனையாக 10 பவுன் கேட்டு அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக மணமகள் விஜியின் அண்ணன் கோவிந்தராசு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்துமகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி வழக்கு பதிவு செய்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிரகாஷ், மாப்பிள்ளையின் அண்ணன் முரளி, அண்ணிவச்சலா,தாய் தயாநிதிஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில்அடைத்தனர்.

    ×