search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wire Theft"

    • கண்ணன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்து மின் மோட்டாரில் மின் வயரை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அக்கம், பக்கம் விசாரித்ததில் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூர்த்தி (37) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கண்ணன் மின் மோட்டாரில் இருந்து 15 மீட்டர் மற்றும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மின் மோட்டாரில் இருந்து 10 மீட்டர் மின்சார வயரை திருடியது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

    • சென்னையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் காப்பர் வயர் பொருத்தப்பட்டு வருகிறது.
    • மர்ம நபர்கள் இரவோடு இரவாக அதனை திருடி சென்றுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    நெல்லை - திருச்செந்தூர் வரையிலான சுமார் 60 கி.மீ. தூர ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் வழிநெடுக மின்கம்பங்கள் நட்டு காப்பர் வயர் பொருத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காலையில் பார்த்த போது மூலக்கரை ரெயில்வே கேட் அருகில் இருந்து ஆறுமுகநேரி சந்திப்பு ெரயில் நிலையம் வரையிலான ஆயிரத்து 341 மீட்டர் நீள காப்பர் வயர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் இரவோடு இரவாக அதனை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரெயில்வே சிக்னல் வயரை திருடியது தொடர்பாக கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சிக்னல் வயர் மற்றும் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.
    • பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தொழுதாவூர் ரெயில்வே கேட் பகுதியில் சிக்னலுக்காக பொருத்தப்பட்ட காப்பர், அலுமினியம் கலந்த வயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    மேலும் சில வயர்களை தொழுதாவூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி இருந்தனர். அதனை ரெயில்வே போலீசார் மீட்டனர்.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் அரக்கோணம் கோட்ட உதவி ஆணையர் ஏகே.பிரித் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மதுசூதன ரெட்டி, பூமிநாதன் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செபஸ்டின் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அரக்கோணம் அடுத்த சின்ன மோசூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், விக்னேஷ்வரன், ஜீவா, திருவலாங்காடு சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சாரதி, தினேஷ், திருவள்ளூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன், சுபாஷ் ஆகிய 7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சிக்னல் வயர் மற்றும் கம்பிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×