search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே கள்ளக்காதலியின் பெற்றோரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
    X

    பண்ருட்டி அருகே கள்ளக்காதலியின் பெற்றோரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

    • சுபாஷினிக்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவரது மனைவி சத்தியாவதி (49). இவர்களின் மகள் சுபாஷினி (28). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருக்கு சுபாஷினியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுபாஷினி வேலைக்கு சென்றார். அங்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் அப்பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    சில காலங்களுக்கு பிறகு இருவருக்குமிடையே தக ராறு ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எங்கும் கிடைக்காததால், சுபாஷினியின் அம்மா வீடான பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கத்திற்கு வெற்றி வந்தார். அங்கு இருந்த சுபாஷினி யின் பெற்றோரிடம் எனது மனைவி சுபாஷினி எங்கே என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த சத்தியாவதியின் வயிற்றிலும் குத்தியுள்ளார். மயங்கி விழுந்த இருவரையும் பொதுமக்கள் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×