search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் மசாஜ் சென்டரில் விபசாரம்- நெல்லை வாலிபர் கைது
    X

    நாமக்கல்லில் மசாஜ் சென்டரில் விபசாரம்- நெல்லை வாலிபர் கைது

    • நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.
    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    அப்போது மசாஜ் செய்வதாக கூறி ஆசையை தூண்டி சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள யாக்கோபுரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×