search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yashwant Sinha"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் அதன் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக தானாகவே அந்த சமூகத்தின் பாதுகாவலராகி விட முடியாது.
    • இந்த முறை ஜனாதிபதி தேர்தல் என்பது அடையாள போட்டி அல்ல, இது சித்தாந்தத்துக்கான போட்டியாகும்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒடிசாவின் பழங்குடி இனத்தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில், வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசில் நிதி, வெளியுறவு மந்திரி பதவி வகித்த யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் யஷ்வந்த் சின்கா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்த முறை ஜனாதிபதி தேர்தல் என்பது அடையாள போட்டி அல்ல, இது சித்தாந்தத்துக்கான போட்டி ஆகும். இது முர்முவா, சின்காவா என்பதற்கான அடையாளம் பற்றிய கேள்வி அல்ல. நான் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க களத்தில் நிற்கிறேன்.

    முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் என்ன செய்திருக்கிறார்? அவர் ஜார்கண்ட் கவர்னராக இருந்திருக்கிறார். அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக தானாகவே அந்த சமூகத்தின் பாதுகாவலராகி விட முடியாது.

    நான் நிதி மந்திரியாக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுகளை பாருங்கள். பழங்குடி சமூகத்தினருக்கு அதிகம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்காக, பெண்களுக்காக சிறப்பு ஒதுக்கீடுகள் செய்திருக்கிறேன். நான் பணியாற்றிய அரசின் கொள்கை அது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த மாதம் 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.
    • அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும்.

    புதுடெல்லி :

    நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 9-ந் தேதி வெளியிட்டது.

    இதன்படி அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை நடந்து வந்தது. நேற்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது.

    அதில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே நேற்று இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்.

    ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் இறந்து விட்டனர்.

    அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார்.

    ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் திரவுபதி முர்மு பெற்றார். ஒடிசாவை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.

    எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தேசிய மாநாடு கட்சியின் ஹஸ்னயின் மசூதி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் என்.கே.பிரேமசந்திரன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவை (84) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்பவார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் குதித்தார். ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக, ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளராக, பா.ஜ.க.வின செய்தி தொடர்பாளராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார்.

    நேற்றுதான் அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அதுவே நடந்துள்ளது. யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது மத்திய நிதி மந்திரியாக பணியாற்றி உள்ளார். வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது மத்திய நிதி மந்திரியாகவும், வெளியுறவு மந்திரியாகவும் இருந்துள்ளார்.

    • பாராளுமன்ற வளாகத்தில் சரத்பவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார்.

    ​​குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் திரினாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வந்தார்.

    இதற்காக அண்மையில் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் திமுக உள்பட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

    இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும் அவர்கள் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர். இதேபோல் ஃபரூக் அப்துல்லாவும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.

    இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று சரத்பவார் தலைமையில எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்த யஷ்வந்த்சின்கா, அந்த கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக அவர் இருந்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து அவர் விலகி உள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தமக்கு கௌரவம் அளித்ததற்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவிப்பதாக தமது டுவிட்டர் பதிவில் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
    • டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

    புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    பின்னர், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருந்தார்.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமன் செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    • யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும்.

    ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.

    ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

    இதற்காக அவர் மம்தா பானர்ஜிக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.

    கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:

    “குஜராத்தில் 2002-ல் மதக்கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

    2002-இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ராஜினாமா செய்ய ஒருவேளை மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.



    கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக, சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர். #Rafale #YashwantSinha
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்ததாக கூறி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பத்திரிகையில் வெளியான தகவல் முழுமை இல்லாதது என்றும், மேலும் அந்த தகவல் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்றும், எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவுக்கு யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று இருப்பதாகவும், எனவே அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த எதிர்பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உண்மைகளை மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது என்றும், பத்திரிகையில் வெளியான சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தவறான எண்ணத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    பொய்யான தகவல்கள் வெளியாக காரணமாக இருந்து கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோரின் மறுஆய்வு மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Rafale #YashwantSinha
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடி மாயாஜாலம் என்ற கருத்து தகர்ந்துவிட்டது என ய்ஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். #PMModi #YashwantSinha #AssemblyElectionResults2018
    கொல்கத்தா:

    பா.ஜனதா முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்கா. இவர் பிரதமர் நரேந்திர மோடி மீதான அதிருப்தி காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

    தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி மாயாஜாலம் என்ற கருத்தை தகர்த்துவிட்டது. இது பாராளுமன்ற தேர்தலுக்காக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வதற்கு உந்துதலாக இருக்கும்.



    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இரு முனைப்போட்டி ஏற்படுவதுடன் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #YashwantSinha #AssemblyElectionResults2018
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். #FafaleDeal #YashwantSinha #ArunShourie #PrashantBhushan
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரிகளான யஸ்வந்த் சின்கா, அருண் சோரி ஆகியோர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி புகார் செய்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் குற்ற முறைகேடு நடந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.



    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தங்கள் புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரித்து அது குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
    மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கூறியுள்ளார். #PMModi #YashwantSinha #BJP

    பெங்களூர்:

    பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த்சின்கா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்களை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பா.ஜனதா கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முயற்சிக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள ஜனநாயக அமைப்புகள் மீது ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கப்படாத மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது.

    ஐதராபாததில் கவிஞர் வரவரராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது போராட்டக்காரர்களை அடக்கும் முயற்சியாகும். இது போன்ற அடக்குமுறை ஆட்சியை நாடு எப்போதும் கண்டதில்லை. வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை தங்கள் விருப்பம்போல் மத்திய அரசு இயக்கி வருகிறது.

    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது திடீரென்று எச்.ஏ.எல். நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? இதனால் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சவை கவனத்துக்கு வராமல் இந்த பேரம் நடந்துள்ளது. இதற்கு மோடியே பொறுப்பாளி.


    ரபேல் போர் விமானம் வாங்கியதற்கான மொத்த செலவு எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளேன். ‘மேக் இன் இந்தியா’ என்று கூறுபவரே வெளிநாட்டுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்தது சரியா? அந்த நிறுவனத்துக்கு எதிராக நான் பேச மாட்டேன். ஏனென்றால் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்யக்கூடும்.

    புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்பவர் ஒரே நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தது ஏன்? அனுபவம் இல்லாத நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்தீர்கள். இவ்வி‌ஷயத்தில் எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு இது ரகசியம் என்கிறது. இதன் பின்னணியில் என்னென்ன நடக்கிறது என்பது உலகத்துக்கே தெரியும். அதன்பின் எப்படி இது ரகசியமாக இருக்க முடியும்.

    இது ரகசியமாக வைத்திருக்கக் கூடிய வி‌ஷயமல்ல. நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும். மத்திய அரசு உடனடியாக இதற்கு பதில் அளிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டில் பிரதமருக்கு தொடர்புள்ளது. இவ்வி‌ஷயத்தில் பிரதமரே முடிவெடுத்ததாக முன்னாள் மத்திய மந்திரி மனோகர் பார்க்கர் கூறி இருந்தார்.

    பாராளுமன்ற இணை கமிட்டி கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும். அங்கு முடிவெடுத்து மக்களவை, மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டும். ஆளும் கட்சியினரே கமிட்டி தலைவராக இருப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார்
    சென்னை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாரை நேற்று காலை அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சரத்பவார் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்தார்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், வெளியுறவுத் துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் வருவதாக ஒப்புதல் தந்தார்.

    மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    ×