search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "win"

    • வெள்ளாளன்விளையில் கணிதம் பிரிவில் போட்டி தேர்வு நடந்தது.
    • தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட வெள்ளாளன்விளையில் ஓய்.பி.ஏ. சார்பில் போட்டி தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கணிதம் பிரிவில் போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுடலைமணி முதலிடமும், நாராயணமூர்த்தி இரண்டாமிடமும், பாலசுப்பிரமணியன் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஓய்.பி.ஏ. தலைவர் ஜான்கென்னடி டி.எஸ்.பி, மத்திய அரசு ஊழியர் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். போட்டித் தேர்வினை வணிகவரித்துறை அதிகாரி ஜேக்கப், பால்வளத்துறை அதிகாரி பிரவீன், வி.ஏ.ஓ.க்கள் முத்துராமன், டேனியல், ஜெயசந்திரன், பிஷப் அசரியா நினைவு ஆங்கில பள்ளி முதல்வர் லீதியால் தனசீலி, ஆசிரியை ஷிபா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். பரிசுகளை உதிரமாடன்குடியிருப்பை சேர்ந்த ரவி, ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    • இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

    இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    • புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.

    'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.

    புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    • முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின.
    • கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

    நேற்றைய குதிரை பந்தயத்தில், முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங் சன்' என்ற குதிரை, 1.22 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு முதுமலை புலிகள் காப்பக கோப்பையை, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா பங்கேற்று வழங்கினார். ஊட்டியில் திடீரென பெய்த கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
    • 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சேலம்:

    மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.

    இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.
    • கல்வியை அறிவுசார் கல்வியாக மாற்ற வேண்டும் என க.ரவி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 36-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.

    கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    தங்கப்பதக்கங்கள்

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 6 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

    பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அளவில் வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கினார்.

    நினைவுப்பரிசு

    மேலும் டாக்டர் பட்டம் பெற்ற 6 பேராசிரியர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 7 பேருக்கும் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் துணைவேந்தர் க.ரவி பேசியதாவது:-

    இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்க வரும் அனைத்து மாணவர்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையில் பயிற்சி அளிப்பது அவசியம். ஆகையால்தான் மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

    கல்வி கற்பது மட்டும் சிறந்ததாக கருதப்படாது. அந்த கல்வியை அறிவுசார் கல்வியாக மாற்ற வேண்டும். செல்போன் போன்ற நவீன தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தினால் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    கிராமப்புற மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளது. எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆண்டு மலர் வெளியீடு

    விழாவில் கல்லூரி செயலாளர் நாராயணராஜன் ஆண்டுமலரை வெளியிட, அதனை துணைவேந்தர் க.ரவி பெற்றுக்கொண்டார். பின்னர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா நன்றி கூறினார்.

    • பாதுகாப்பு வார விழாவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.
    • வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவக்குமார் தெரிவித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் 52- வது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

    இதனை நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.

    தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, கோலப்போட்டி மற்றும் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி விபத்தினை தடுப்பது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மனித வளம் மற்றும் சட்டப்பிரிவு மேலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தீங்கு அற்ற பணியிடமே எங்களது குறிக்கோள் என்ற கருப்பொருளை மையமாக வைத்து தொழிற்சாலை இயங்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தவறான வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பாதுகாப்பு நடவடிக்கையில் டி.சி.டபிள்யூ. அன்றாடம் பின்பற்றி வரும் நடைமுறை செயல்களை விளக்கி நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பேசினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.

    • கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
    6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.

    • வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் பால்ராஜிடம் வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.
    • 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் அம்பை யூனியன், வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டுக்கும், சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டுக்கும் உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது.

    நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக பால்ராஜ் என்பவர் 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பால்ராஜ் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். அவரது வார்டில் மொத்தம் 197 வாக்குகள். ஆனால் அதில் 142 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அவருக்கு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.

    தென்காசி

    இதேபோல் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஜெயந்தி என்பவர் 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 306 வாக்குகள் பதிவான நிலையில் 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார். இவர்கள் நாளை மறுநாள்(15-ந்தேதி) பதவி ஏற்கின்றனர்.

    மத்திய அரசு பணியாளர் தேர்வில் மைக்கேல்பட்டி மாணவி இந்திய அளவில் 338-வது இடத்தை பிடித்துள்ளார்.
    பூதலூர்:

    மத்திய அரசு நடத்திய மத்திய தேர்வாணைய தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளன. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்–பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி என்பவரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா (23) அகில இந்திய அளவில் 338-வது இடத்தை பிடித்தார்.

    ஆரம்பம் முதல் மேல்நிலை படிப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி. இ. வேளாண்மை முடித்தவர் ஏஞ்சலின்ரெனிட்டா. தொடக்க கல்வியை மைக்கேல்பட்டி உதவி–பெறும் தொடக்கப்–பள்ளியில் படித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடியமைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்–பள்ளியில் படித்தவர்.

    10-ம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும் 12-ம் வகுப்பில் 1158 மதிப்பெண் பெற்றார். சென்னையில் பி.இ. வேளாண்மை முடித்த பின்னர் முழு வீச்சில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டார். தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 

    இவரது அண்ணன் எம். டெக் படித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அண்ணன்-தங்கை இருவரும் பொறி–யியல் படித்திருந்த போதிலும் முயற்சியுடன் முனைந்து படித்து முதல் தடவையில் மத்திய அரசு தேர்வாணைய தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஏஞ்சலின் ரெனிட்டாவை பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் பாராட்டினார்கள்.

    பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WomenT20 #Velocity #Supernovas
    ஜெய்ப்பூர்:

    3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன.

    ‘டாஸ்’ ஜெயித்த வெலா சிட்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5 பந்துகளில் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெலா சிட்டி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேனிலி வியாத் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மிதாலி ராஜ் 40 ரன்னுடனும், வேதா கிருஷ்ணமூர்த்தி 30 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லீக் ஆட்டங்கள் முடிவில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி, மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

    ரன்-ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. டிரைல் பிளாசர்ஸ் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டி ஜெய்ப்பூரில் நாளை இரவு நடக்கிறது. #WomenT20 #Velocity #Supernovas
    ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் என நடிகை ஜெயபிரதா கூறினார். #JayaPrada
    நகரி:

    தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகை ஜெயபிரதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றினேன். தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவின் வசம் வந்த பிறகு என்னை மிகவும் அவமதித்தனர். அப்போது அமர்சிங், என்னை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்துவிட்டார்.

    2004-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

    எனக்கு கட்சியில் செல்வாக்கு உயர்ந்தது அக்கட்சியில் இருந்த அசம்கானுக்கு பிடிக்கவில்லை. 2009-ம் ஆண்டு மீண்டும் எனக்கு ராம்பூர் தொகுதி வழங்கப்பட்டதால் என்னை தோற்கடிக்க அசம்கான் முயற்சி செய்தார். இருப்பினும் நான் வெற்றி பெற்றேன்.

    அகிலேஷ் யாதவுடன் அமர்சிங்குக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் என்னையும், அவரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இதற்கிடையே, அசம்கான் என்மீது ஆசிட் ஊற்ற முயன்றார். மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து என்னை அசிங்கப்படுத்தினார். இதையடுத்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி சார்பில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தேன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி இருந்தேன்.

    ஆந்திர மாநிலம் ராஜமுந்தியில் நான் பிறந்திருந்தாலும், ராம்பூர் தொகுதி மக்கள் என்மீது காட்டிய அன்பு அளப்பரியது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை விடவில்லை. அந்த நேரத்தில் எனக்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு அளித்தது.

    அதனால் அக்கட்சியில் இணைந்து ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. ராம்பூர் தொகுதி மக்கள் என்னை 3-வது முறையாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×