என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல்- ஆட்டோ டிரைவர் உள்பட 3 ஊராட்சி உறுப்பினர்கள் வெற்றி
    X

    நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல்- ஆட்டோ டிரைவர் உள்பட 3 ஊராட்சி உறுப்பினர்கள் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் பால்ராஜிடம் வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.
    • 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் அம்பை யூனியன், வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டுக்கும், சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டுக்கும் உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது.

    நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக பால்ராஜ் என்பவர் 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பால்ராஜ் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். அவரது வார்டில் மொத்தம் 197 வாக்குகள். ஆனால் அதில் 142 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அவருக்கு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.

    தென்காசி

    இதேபோல் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஜெயந்தி என்பவர் 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 306 வாக்குகள் பதிவான நிலையில் 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார். இவர்கள் நாளை மறுநாள்(15-ந்தேதி) பதவி ஏற்கின்றனர்.

    Next Story
    ×