என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "silver medal"
- மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
- 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சேலம்:
மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார்
- மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு
ஜோலார்பேட்டை:
33-வது தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 9-ந் தேதி முதல் துவங்கி 11-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற்றது.
ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள்.
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா பிளஸ் 2 பயிலும் மாணவி பங்கேற்றார்.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 37.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற நாட்றம்பள்ளியில் உள்ள எஸ்கேவிஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேற்று சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் தென்னிந்திய அளவில் ஜூனியர் தேசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நெட்டப்பாக்கம், மடுகரை, கரியமாணிக்கம், கரையாம்புத்தூர், கல்மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானமும் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், அந்தந்த கிராம பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
- 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நெல்லை:
பாளை அண்ணா விளையாட்டரங்கில் தமிழகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இளையோருக்கான அகில இந்திய நீச்சல் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிஷ்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு நீச்சல் கழகத்தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். செயலர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் ஜகர்தா மற்றும் பாலம்பேங் நகரங்களில் நடந்தது. இந்த போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர் தருண் (வயது 21) கலந்துகொண்டு 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர். தருணின் தந்தை அய்யாசாமி. தருண் 4-ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். தாயார் பூங்கொடி (46). இவர் கணியாம்பூண்டி அருகே உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தருணின் தங்கை சத்தியா (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தருண் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தனது தாயார் வேலை செய்து வரும் பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள செஞ்சுரி மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் படித்தார். தற்போது மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.
பள்ளியில் படிக்கும் போதே தடகள வீரராக உருவாகிய தருண் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பதங்கங்களை வென்றுள்ளார். மேலும், பிளஸ்-2 படிக்கும் போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த அவினாசி வீரர் தருண் இந்தோனேசியாவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து இறங்கிய அவரை, அவரது தாயார் பூங்கொடி, தங்கை சத்தியா மற்றும் குடும்பத்தினர், பயிற்சியாளர் அழகேசன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பலர் தருணை தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் அங்கிருந்து ராவுத்தம்பாளையத்திற்கு காரில் தருண் புறப்பட்டு சென்றார்.
இதன் பின்னர் காலை 10.30 மணி அளவில் அவினாசி, ராவுத்தம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் சார்பில், அவினாசி பஸ் நிலையத்தில் தருணுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த தருணுக்கு மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு கொடுத்து, மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தருணுக்கு, வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும், பலர் மாலையும் அணிவித்தனர்.
அவினாசி பஸ் நிலையத்திற்கு தருண் வந்ததும், அவரை பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் பலரும் தருணுடன் ‘செல்பி’ எடுக்க முயற்சி செய்தனர். இதை அறிந்த தருண் செல்பி எடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களுடன் புன்னகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதன் பின்னர் அவினாசி பஸ் நிலையத்தில் இருந்து வாகனத்தில் தருண் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு மேளம், தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் பலர் தருணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றதும் அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் தருணுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவிலுக்குள்ளே சென்றதும், அவருக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் தருண் பல வெற்றிகள் பெற வேண்டும் என அவரது பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு, தருண் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு சென்றார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தருணுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். #AsianGame2018 #Tharun
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.
இதுதொடர்பாக அறிக்கையில், வெற்றி வீரர் தருண் அய்யாசாமி கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் தங்கம் வென்றதையும் சுட்டிக்காட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தருணின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட முதல்வர், தருண் அய்யாசாமியின் எதிர்கால வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்குவாஷ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சவரல் கோஷல், தீபிகா கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை தாய் சியுயிங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாக போராடிய சிந்து, 13-21, 16-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா மொத்தம் 2 பதக்கங்கள் வென்றுள்ளது. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்ததால் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #PVSindhu
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அரையிறுதியில் சீன தைபே அணியை 27-14 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.
இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IranianWomensKabaddi
இந்நிலையில், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை துப்பாக்கி சுடும் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்தம் 452.7 புள்ளிகள் பெற்றார்.
இப்பிரிவில் சீன வீரர் ஹுயி ஜிசெங் தங்கப்பதக்கமும் (453.3 புள்ளிகள்), ஜப்பான் வீரர் மத்சுமோட்டோ (441.4 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #AsianGames2018 #SanjeevRajput
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்