என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Deepika Kumari"
- சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்.
- கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது.
ராஞ்சி:
சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது, சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தீபிகா குமாரி, தற்போதைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ள உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார்.
ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்றார். இது குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதாகவும் தீபிகா குமாரி தெரிவித்தார். சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் பலன்கள் வரும் ஆண்டுகளில் தெரிய வரும் என்று வில்வித்தை வீரர் அதானு தாஸ் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார். #Archer #DeepikaKumari #AtanuDas
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி 5-வது நாளாக நடக்கிறது.
இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வடகொரிய வீராங்கனை ஜியாங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான பிரோமிளா 2-6 என்ற கணக்கில் மாங்கோலியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். ஆண்கள் வில்வித்தை பிரிவில் அட்னுதாஸ் 7-3 என்ற கணக்கில் வடகொரியாவை சேர்ந்த யூங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல் மற்றொரு வீரரான விஸ்வாஸ் 6-2 என்ற கணக்கில் மாங்கோலியாவின் பாட்டாவை வீழ்த்தினார். காலையில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீரர் விர்தலால் காதே 24.09 வினாடியில் கடந்து 5-வது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு இந்திய வீரரான அன்ஷில் கோத்தாரி இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை. அவர் 25.45 வினாடியில் கடந்து 28-வது இடத்தை பிடித்தார்.
ஆண்கள் 100 மீட்டர் பிரிஸ்டைல் தகுதி சுற்றில் டிசாசா 27-வது இடம் (51.50 வினாடி), விர்தலால் காதே 43-வது இடமும் (59.11 வினாடி) பிடித்து இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர்.
ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஅரி நட்ராஜ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தகுதி சுற்றில் 2 நிமிடம் 02.97 வினாடியில் கடந்து 7-வது இடத்தை பிடித்தார்.
மற்றொரு இந்திய வீரர் அத்வாய்பேஜ் 12-வது இடத்தை (2.06.85) பிடித்து வாய்ப்பை இழந்தார். #AsianGames2018
இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை எதிர்கொண்டார். முதல் செட்டில் 30-க்கு 29 புள்ளிகள் பெற்று தீபிகா குமார் 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3-வது சுற்றை ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றினார். இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலையில் இருந்தது.
ஆனால், 4-வது மற்றும் 5-வது செட்டில் அபாரமாக அம்பு எய்திய தீபிகா குமாரி முறையே 29 புள்ளிகள், 27 புள்ளிகள் பெற்றார். ஜெர்மனி வீராங்கனையால் இரண்டு செட்டிலும் தலா 26 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 7-3 என தீபிகா குமாரி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெற்றார்.
2011, 2012, 2013 மற்றும் 2015 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய தீபிகா குமாரியால் தங்கம் வெல்ல முடியவில்லை. தற்போது முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.
ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹன்செனிடம் சறுக்கினார். ஹன்சன் 140 புள்ளிகள் சேர்க்க, அபிஷேக் வர்மாவால் 123 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.
கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா உடன் இணைந்து விளையாடினார். இதில் இந்த ஜோடி 147-140 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பெண்களுக்கான தனிப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான அணிப்பிரிவில் அட்டானு தாஸ் உடன் இணைந்து வெண்கலப் பதக்கத்திற்கும் போட்டியிடுகிறார். இதனால் குமாரி இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்