search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை வில்வித்தை- இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்
    X

    உலகக்கோப்பை வில்வித்தை- இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்

    நான்கு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். #DeepikaKumari
    அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் வில்வித்தை உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிப்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தீபிகா குமாரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை எதிர்கொண்டார். முதல் செட்டில் 30-க்கு 29 புள்ளிகள் பெற்று தீபிகா குமார் 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3-வது சுற்றை ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றினார். இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலையில் இருந்தது.



    ஆனால், 4-வது மற்றும் 5-வது செட்டில் அபாரமாக அம்பு எய்திய தீபிகா குமாரி முறையே 29 புள்ளிகள், 27 புள்ளிகள் பெற்றார். ஜெர்மனி வீராங்கனையால் இரண்டு செட்டிலும் தலா 26 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 7-3 என தீபிகா குமாரி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெற்றார்.

    2011, 2012, 2013 மற்றும் 2015 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய தீபிகா குமாரியால் தங்கம் வெல்ல முடியவில்லை. தற்போது முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.
    Next Story
    ×