search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atanu Das"

    • சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்.
    • கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது.

    ராஞ்சி:

    சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

    இந்த கலந்துரையாடலின் போது, சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தீபிகா குமாரி, தற்போதைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ள உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார். 


    ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்றார். இது குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    தமது குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதாகவும் தீபிகா குமாரி தெரிவித்தார். சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் பலன்கள் வரும் ஆண்டுகளில் தெரிய வரும் என்று வில்வித்தை வீரர் அதானு தாஸ் கூறினார்.

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். #Archer #DeepikaKumari #AtanuDas
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார். #Archer #DeepikaKumari #AtanuDas
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகாகுமாரி, அட்னுதாஸ் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். #AsianGames2018
    பாலெம்பேஸ்:

    இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி 5-வது நாளாக நடக்கிறது.

    இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வடகொரிய வீராங்கனை ஜியாங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான பிரோமிளா 2-6 என்ற கணக்கில் மாங்கோலியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். ஆண்கள் வில்வித்தை பிரிவில் அட்னுதாஸ் 7-3 என்ற கணக்கில் வடகொரியாவை சேர்ந்த யூங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல் மற்றொரு வீரரான விஸ்வாஸ் 6-2 என்ற கணக்கில் மாங்கோலியாவின் பாட்டாவை வீழ்த்தினார். காலையில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீரர் விர்தலால் காதே 24.09 வினாடியில் கடந்து 5-வது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு இந்திய வீரரான அன்ஷில் கோத்தாரி இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை. அவர் 25.45 வினாடியில் கடந்து 28-வது இடத்தை பிடித்தார்.

    ஆண்கள் 100 மீட்டர் பிரிஸ்டைல் தகுதி சுற்றில் டிசாசா 27-வது இடம் (51.50 வினாடி), விர்தலால் காதே 43-வது இடமும் (59.11 வினாடி) பிடித்து இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர்.

    ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஅரி நட்ராஜ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தகுதி சுற்றில் 2 நிமிடம் 02.97 வினாடியில் கடந்து 7-வது இடத்தை பிடித்தார்.

    மற்றொரு இந்திய வீரர் அத்வாய்பேஜ் 12-வது இடத்தை (2.06.85) பிடித்து வாய்ப்பை இழந்தார். #AsianGames2018
    ×