search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்வித்தை உலகக்கோப்பை- இந்திய வீரர் அபிஷேக் வர்மா 2 பதக்கம் வென்றார்
    X

    வில்வித்தை உலகக்கோப்பை- இந்திய வீரர் அபிஷேக் வர்மா 2 பதக்கம் வென்றார்

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக். இரண்டு பதக்கங்கள் வென்றார். #ArcheryWorldCup
    உலகக்கோப்பை வில்வித்தை தொடர் அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா அரையிறுதியில் ரஷியாவின் அன்டோன் புலாயெவ்-ஐ 150 புள்ளிகள் பெற்று வீழ்த்தினார்.

    ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹன்செனிடம் சறுக்கினார். ஹன்சன் 140 புள்ளிகள் சேர்க்க, அபிஷேக் வர்மாவால் 123 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.



    கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா உடன் இணைந்து விளையாடினார். இதில் இந்த ஜோடி 147-140 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பெண்களுக்கான தனிப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான அணிப்பிரிவில் அட்டானு தாஸ் உடன் இணைந்து வெண்கலப் பதக்கத்திற்கும் போட்டியிடுகிறார். இதனால் குமாரி இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
    Next Story
    ×