என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அகில இந்திய கூடைப்பந்து போட்டி-இந்திய கப்பல்படை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி
- இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
- கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.
கோவை,
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.
இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்