search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடைப்பந்து"

    • மாநில கூடைப்பந்து போட்டி நாளை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
    • ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பி.ஆர்.டி. ஆதரவுடன் 18-வது மாநில கூடைப்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ந்தேதி வரை சென்னை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப். இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., சத்யபாமா பல்கலைக்கழகம் உள்பட 72 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜே.ஐ.டி, எத்திராஜ். இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 26 அணிகளும் பங்கேற்கின்றன. இதில் இரு பாலரிலும் முதல் இடத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.40 ஆயிரம், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம். 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

    • பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது.
    • இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர்

    பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது. அவ்வகையில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூரை உள்ளடக்கிய கோவை மண்டல அணிக்கான தேர்வு குன்னூரில் துவங்கியது. செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    4 போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர், வீராங்கனைகள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மாதம் 31ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கான கூடைப்பந்து வீரர் அணி தேர்வு நடக்கிறது. செப்டம்பர் 4ந்தேதி, கூடைப்பந்து வீராங்கனைகள அணித்தேர்வு நடக்கிறது.

    செப்டம்பர் 2-ந்தேதி நஞ்சப்பா பள்ளியில், மாணவர் கபடி அணித்தேர்வும், ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகள் கபடி அணி தேர்வும் நடக்கிறது.

    இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.   

    • அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் அரையிறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை வருமானவரித்துறை அணியை எதிர்த்து இந்தியன் ரெயில்வே அணி விளையாடியது. இதில் வருமானவரித்துறை அணி 67-58 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்தபடியாக ஆண்கள் பிரிவுக்கான 2-வது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 86-77 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வருமானவரித்துறை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

    இதேபோல சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பெண்கள் பிரிவு அரையிறுதி போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணியை எதிர்த்து, ஹுப்ளி தென்மேற்கு ரெயில்வே அணி விணையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 92-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து பூனே மேற்கு ரெயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 64-61 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    பெண்கள் அணியில் கேரளா மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணிகள் ஆகியவை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்க உள்ளது.

    • மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • இந்த போட்டிகளில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-வது ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. கோப்பை கூட்டைப்பந்து போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்துக்கு அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.

    இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.

    இதன் ஒருபகுதியாக ஆண்கள் பிரிவின் முதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை வருமானவரி அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் வருமானவரி அணி 78-57 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆப் பரோடா அணி 82-72 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    பெண்கள் பிரிவுக்கான முதல் போட்டியில் மும்பை மத்திய ரெயில்வே அணியை எதிர்த்து, கோவை மாவட்ட கடைப்பந்து அணி விளையாடியது. இதில் மத்திய ரெயில்வே அணி 83-48 எனற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து, சென்னை தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்வாரிய அணி 75- 32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் சென்னை வருமான வரி அணியும், திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும் மோதின.

    இதில் கேரளா போலீஸ் அணி 66-55 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு போட்டிகள் நடந்தன. 

    • மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் பிப்ரவரி 21-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்வது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசியதாவது ;-

    இந்த கூட்டத்தில் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 2.2.2023 முதல் 4.2.2023 வரை தேதிகளிலும்,

    கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள், 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

    பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 23.02.2023 அன்றும், மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் 17.02.2023 அன்றும் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் 21.02.2023 அன்றும் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

    மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர்குமரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
    6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.

    • வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
    • செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

    தஞ்சாவூர்:

    மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷன்-நில் வாழ்க்கை திறன் மேம்பாட்டுடன் கூடிய கூடைப்பந்து பயிற்சி வகுப்பின் "இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய வீரர்களை பாராட்டு நிகழ்வும் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்விற்கு பவுண்டேஷனின் மாணவன் ஸ்வேதன்ஷூ நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன்பவுண்டேஷன் சேர்மன் பொறியாளர்இளவரசு முன்னிலை வகித்தார்.

    ஜேசி பொறியாளர் சுரேஷ்குமார் தலைவர் தேர்வு, ஜேசிஐ தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் தலைமை உரையாற்றினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷனின் நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவ ருமான 'ஏசியாட்' முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    கௌரவ விருந்தினராக மேகளத்தூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஜோஸ்பின் ஆல்பர்ட் மேரி, சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்இன்னிசை சுகுமாரன் ஆகியோர் மாணவர்கள் எதிர்கா லத்தில் தலைசிறந்த தலைவர்களாக உருவாக தற்காலத்தில் எந்தெந்த பகுதியில் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று பேசினர்.

    சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற 13 வயதுக்கு ட்பட்ட மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து அணிக்கு தலைவராக விளையாடிய கனிஷ்கர் மற்றும் அனிருத்தன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

    முடிவில் பவுண்டேஷன் மாணவர் அமுதன் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அலங்காநல்லூரில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
    • கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் பொன் விஜயா, சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவில் கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, தலைமை ஆசிரியர்கள் பிராக்ரன்ஸ் லதா, (பொறுப்பு) சுதா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலான் பானு, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், நகர செயலாளர் ரகுபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டங்கள் இடையேயான மாநில ஜூனியர் கூடைப்பந்து தொடருக்கான சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மாவட்டங்கள் இடையேயான மாநில ஜூனியர் (13 வயதுக்குட்பட்டோர்) கூடைப்பந்து போட்டி இன்று முதல் 21-ந்தேதி வரை விருதுநகர் மற்றும் தஞ்சையில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான சென்னை மண்டலம் 1 அணியை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் அறிவித்துள்ளார்.

    அணி விவரம் வருமாறு:-

    சிறுவர்:- திவாகர், கமலேஷ் சாய், மிருதுன்வேல், நிஷித், பிரணவதன், சச்சின் ஆதித்யா, சரண், சஞ்சய், தருண், தவீஷ் விவேக், திவேஷ், விமலன். பயிற்சியாளர்- சஞ்சய் குமார், உதவி பயிற்சியாளர்- அருணாச்சலம், மானேஜர்- லோகநாதன்.

    சிறுமியர்:- காயத்ரி, ஹூசைனா, உசேன், ஜனி ஆஸ்டின், ஜெயஸ்ரீ, மது அன்னம், மஞ்சுளா, மோனிஷா, நில்தி, ரியாமேனன், வர்ஷினி, சுவேரா, சுமேஷ், வானிஸ்ரீ. பயிற்சியாளர்- விக்னேஷ், உதவி பயிற்சியாளர்- ஹேமலதா.
    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து அணி சார்பில் நடத்தப்பட்ட 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து அணி சார்பில் 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியன் வங்கி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் 95-61 என்ற புள்ளி கணக்கில் சுங்க இலாகா அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியில் முயின் பெய்க் 29 புள்ளியும், ஹரி ராம் 21 புள்ளியும் சுங்க இலாகா அணியில் சந்தோஷ் 13 புள்ளியும், ஐ‌ஷன் 10 புள்ளியும் எடுத்தனர்.

    சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு ரூ.30 ஆயிரத்துடன் ராகன் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சுங்க இலாகாவுக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு சிறப்பு போலீசுக்கும் ரூ.10 ஆயிரமும், 4-வது இடத்தை பிடித்த அரைஸ் ஸ்டீல் அணிக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் அரைஸ் ஸ்டீல் சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்த ரைசிங் ஸ்டார் அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.
    ×