search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state basketball"

    • மாநில கூடைப்பந்து போட்டி நாளை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
    • ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பி.ஆர்.டி. ஆதரவுடன் 18-வது மாநில கூடைப்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ந்தேதி வரை சென்னை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப். இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., சத்யபாமா பல்கலைக்கழகம் உள்பட 72 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜே.ஐ.டி, எத்திராஜ். இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 26 அணிகளும் பங்கேற்கின்றன. இதில் இரு பாலரிலும் முதல் இடத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.40 ஆயிரம், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம். 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் ரைசிங் ஸ்டார் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை நடக்கிறது. #basketball

    சென்னை:

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 15-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (27-ந்தேதி) முதல் மே 5-ந்தேதி வரை நடக்கிறது. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கிறது.

    ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் வங்கி, வருமானவரி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஆயுதப்படை அரைஸ் ஸ்டீல் உள்பட 67 அணிகள், பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் அரைஸ் ஸ்டீல், ஜேப்பியார் இன்ஸ்டிடிட், ரைசிங் ஸ்டார் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 20 அணிகள் என மொத்தம் 87 அணிகள் பங்கேற்கின்றன.

    அரைஸ் ஸ்டீல் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆதரவுடன் நடக்கும் இப்போட்டியின் மொத்த பரிசுதொகை ரூ.2 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டி நடக்கிறது. மேற்கண்ட தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்தார். #basketball

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சுங்க இலாகா அணி வெற்றி பெற்றுள்ளது.
    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் சுங்க இலாகா 75-67 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணியை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்து ஆட்டங்களில் ரைசிங் ஸ்டார் 62-54 என்ற கணக்கில் இந்துஸ்தான் கிளப்பையும், அரைஸ் ஸ்டீல் 58-57 என்ற கணக்கில் சுங்கம் கிளப்பையும் தோற்கடித்தன. #tamilnews

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.
    சென்னை:

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடலில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 22-ந்தேதிக்குள் செயலாளர் 63/76 புதுத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார். #tamilnews
    ×