search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "well"

    • கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
    • உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

    தாமம்:

    மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

    தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். 

    • கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி விவசாயி, நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி(வயது 33). விவசாயி. இவரது மனைவி ராமலெட்சுமி.

    முத்துமாரிக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அங்கு நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.

    இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டி உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி சவுந்தரம் (வயது 75).இவர் உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுந்திரம் வெள்ளகோவில் அருகே உள்ள மோளகவுண்டன்வலசில் உள்ள மகன் சிவசாமி (47), வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவசாமி திடீரென்று எழுந்து பார்த்த போது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன் தாய் சவுந்திரத்தை வீட்டில் காணவில்லை. இதனால் தாயாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றின் அருகில் சிவசாமி வீட்டு போர்வை, சவுந்தரத்தின் செருப்பு கிடந்துள்ளது. உடனே கிணற்றுக்குள் பார்க்கும்போது சவுந்தரம் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சவுந்தரத்தின் உடமலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி சங்கரன்கோவில் சாலை அருகே உள்ள சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிணற்றில் விழுந்து இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எதற்காக புளியங்குடி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.
    • மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கினார்.

    மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார். உடனே பக்கத்தில் இருக்கிறவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உடனே வந்து கிணற்றுக்குள் இறங்கி செல்வராஜ்யை கயிறுகட்டிஉயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.
    • காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா்.

    காங்கயம்:

    திருப்பூா் நல்லூா்-சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் மகன் தீபக்பிரசாத் (வயது20). இவா் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா்.

    இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று உடன் படிக்கும் கதிா் (19), நவீன் (19), பிரவீன் (19), தீபன் (22) ஆகியோருடன் நத்தக்காடையூா்-நஞ்சப்பகவுண்டன் வலசு, முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.

    தீபக் பிரசாத்துக்கு நீச்சல் தெரியாது என்பதால், காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா். குளித்து முடித்துவிட்டு தண்ணீா் கேனை அவிழ்த்துவிட்டு கிணற்றில் இருந்து மேலே ஏறியபோது, நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளாா்.

    இதையடுத்து உடன் இருந்த சக நண்பா்கள் காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், அவா் அதற்குள் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீபக் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இச்சம்பவம் தொடா்பாக காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • குறுவை நெல் அறுவடையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
    • விவசாயிகள் தங்களது நெல்லை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் அடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 2022-23-ம் ஆண்டு குறுவை நெல் அறுவடையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள்
    வாணிகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

    பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் குறுவை பருவத்திற்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு அறிவித்துள்ளபடி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2060-ம், மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.100-ம் என மொத்தம் ரூ.2160 வழங்கப்படும்.

    அதேபோல் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2040-ம், ஊக்கத்தொகை ரூ.75-ம் என மொத்தம் ரூ.2115 வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களது நெல்லை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் பொது கிணறு ஒன்று உள்ளது.
    • கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்காரம் பாளையம் ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் தெக்கலூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இந்த கிணறு இருந்து வந்துள்ளது.

    கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் இருந்து பல ஆண்டுகளாக மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் கயிற்றால் வாளி மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். பிற்காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுத்தனர்.

    இதன்மூலம் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழை காலங்களில் கனமழை காரணமாக இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் கிராமத்தின் நடுவில் உள்ள கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருவோர் தவறி கிணற்றினுள் விழும் நிலை உள்ளதாகவும் அதேபோல் குழந்தைகள், சிறுவர்கள் யாரேனும் இந்த கிணற்றில் விழும் அபாயம் நிலையில் உள்ளது.

    எனவே இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் முன் கிணற்றின் பக்கவாட்டு சுவரை அமைத்து தர வேண்டும் என மாவட்ட, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். இதன்படி ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், வார்டு உறுப்பினர் அமாவாசை ஆகியோர் இது குறித்து பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

    • சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சிக்குட்பட்ட உசரத்துகுடியிருப்பு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.
    • கிணற்றின் சுற்றுச்சுவர் உயரம் குறைவான நிலையில், மேல் மூடி இல்லாமல் மிக ஆபத்தான நிலையில் உள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சிக்குட்பட்ட உசரத்துகுடியிருப்பு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிக்கு ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    கிணற்றின் சுற்றுச்சுவர் உயரம் குறைவான நிலையில், மேல் மூடி இல்லாமல் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடி வருகின்றனர். இதில் அவர்கள் அறியாமல் தவறி கிணற்றில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆகவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உசரத்துக்குடியிருப்பில் அபாய நிலையில் காணப்படும் கிணறுக்கு மூடி போட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்தன்தருவை பொதுநல குழுமம் சார்பில் ரியாஸ் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.


    • ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பாளையம் போலீ–சாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட–னர்.

    சரவணம்பட்டி:

    கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் அருகே சிவசக்தி நகரில் ஒரு தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பாளையம் போலீ–சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று கிணற்றுக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தொடர்ந்து கிணற்றில் கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் எஸ்.ஆர்.பி.மில் அருகே துணிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட–னர்.

    அப்போது ரங்கசாமி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், திடீரென்று கோவில்களில் சென்று அமர்ந்து விடுவதாகவும் அங்கிருந்து அவரை மீட்டு வீட்டுக்கு கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.நேற்றும் அதேபோன்று வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து ேகாவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் உடலை வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். துணிக்கடை முதலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×