search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunk man"

    • வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
    • ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக குருகிராம் மாவட்டத்தில் உள்ள டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்தள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கிய மழை நீரில் மூழ்கி போதை ஆசாமி உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரம், நேற்று முன்தினம் மாலை வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரிபேந்து எனவும், அவர் மானேசரியில் உள்ள ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    அரிபேந்து சனிக்கிழமை இரவு முழுவதும் மது அருந்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியதாக இறந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். குடும்ப உறுப்பினர்களால் புகார் ஏதும் அளிக்காததால் வழக்கப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லியில் மது போதையில் போக்குவரத்து போலீஸ் மீது கார் ஏற்றிய நபர் கைது.
    • விபத்தில் சிக்கிய போலீசாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் மீது மது போதையில் வந்த நபர் காரை ஏற்றியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். மது போதையில் போலீசார் மீது காரை ஏற்றிய நபர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார்.

    போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் செலுத்தாமல் தப்பிக்க நினைத்து, மது போதையில் வந்த ஆசாமி காரை கொண்டு மோதியிருக்கிறார். விபத்தில் சிக்கிய தலைமை கான்ஸ்டபில் விகாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் விபத்தில் சிக்கிய மற்றொரு போலீஸ் சூரத் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மது போதையில் விபத்தை ஏற்படுத்திய நபர் சந்தோஷ் (வயது 31) ஆகும். இவர் டெல்லியை அடுத்த துவாரகா ஜெஜெ காலனியை சேர்ந்தவர் ஆவர். துவாரகா நகர் செக்டார் 1 பகுதியில் இந்த சம்பம் அரங்கேறியதாக காவல் துறை துணை ஆணையர் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார்.

    விபத்தை ஏற்படுத்திய சந்தோஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக துவாரகா தெற்கு காவல் நிலையத்தை சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • மதுகுடித்துவிட்டு ஆற்றில் குளிக்கச்சென்றவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்
    • பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(40). ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் வீரபாண்டி கன்னீஸ்உடையார் கோவில் அருகே மதுகுடித்துவிட்டு ஆற்றில் குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஆதிலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்டோவில் குடி போதையில் தகராறு செய்தவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி மணிமுத்து (36). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தேவாரத்தில் இருந்து மாணிக்கபுரத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதற்காக தேவாரத்தைச் சேர்ந்த கூத்தபெருமாள் என்பவரது ஆட்டோவில் ஏறினர். மணிகண்டன் குடிபோதையில் இருந்தார்.

    ஊருக்கு செல்வதற்கு ரூ.500 வாடகை பேசினார். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகு 500 ரூபாய் தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். தான் ஏறிய இடத்திலேயே தன்னை இறக்கி விடுமாறு மணிகண்டன் தகராறு செய்தார்.

    இதனால் கூத்தபெருமாள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து கூத்தபெருமாளை கைது செய்தனர்.
    ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகார நபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane
    மாஸ்கோ:

    ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத் நகரத்தில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபர், விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

    போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் விமானத்தில் ஏறி அந்த நபரை கைது செய்தனர். குடிபோதையில் இருந்த அவர் சூர்குத் நகரை சேர்ந்தவர் என்பதும், சொத்துகளை சேதம் செய்த வழக்கில் தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரிந்தது. அவர் மீது விமானத்தை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane

    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், மிதமிஞ்சிய போதையில் பக்கத்து இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #AIFlight #DrunkPassenger
    புதுடெல்லி:

    நியூயார்க்கில் இருந்து நேற்று புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த ஒரு பயணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் தள்ளாடியபடி அங்குமிங்கும் சென்றுள்ளார். பின்னர், ஒரு பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இது அந்த பெண் பயணி மற்றும் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

    இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றி உள்ளனர். விமானம் டெல்லி வந்து சேர்ந்ததும், அந்த பெண் பயணிக்கு நேர்ந்த அவமரியாதை மற்றும் அதிர்ச்சி அனுபவம் குறித்து அவரது மகள் இந்திராணி கோஷ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    ஏர் இந்தியா விமானத்தில் தனது தாய் விமானத்தில் பயணம் செய்தபோது, அவரது இருக்கையில் போதையில் இருந்த ஒரு பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திராணி கோஷ் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, சுஷ்மா சுவராஜ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை டேக் செய்திருந்தார்.

    இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை இணை மந்திரி உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #AIFlight #DrunkPassenger
    அமெரிக்காவில் தனது முன்னாள் காதலி வேறு நபருடன் இருந்ததால் ஆத்திரமடைந்து அவர் முகத்தில் பிஸ்கட் வீசி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் உள்ள கிழக்கு நாஸ்வெய்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரே தோமெர்லின். சாலையில் நடந்து செல்லும் போது தனது முன்னாள் காதலி வேறொரு நபருடன் காரில் செல்வதை பார்த்து ஆத்திரம் கொண்டுள்ளார்.

    இதனையடுத்து தன் கையில் இருந்து பிஸ்கட் பாக்கெட் கொண்டு காதலியின் முகத்தில் எறிந்து தனது ஆத்திரத்தினை தீர்த்துக் கொண்டுள்ளார். மேலும் காரில் இருந்தபடியே தனது முன்னாள் காதலியையும், அவருடன் இருந்து புதிய நபரையும் ஜெப்ரே திட்டி தீர்த்துள்ளார்.

    இச்சம்பவத்தின் போது சம்பவயிடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் ஜெப்ரேவை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் ஒழுக்ககேடாக செயல்பட்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    ×