search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agra"

    • ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

    "ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."

     


    "இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தாஜ்மகால் வளாகத்தில் குரங்குகள் தாக்கியதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயம் அடைந்துள்ளனர். #TajMahal
    லக்னோ : 

    ஆக்ரா நகரில் உள்ள சுற்றுலா தலமான தாஜ்மகாலில் கடந்த சில மாதமாக நாய்கள் மற்றும் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. தாஜ்மகாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளையும் அவை அவ்வப்போது பயமுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று தாஜ்மகாலை பார்வையிட வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை குரங்குகள் கூட்டமாக தாக்கியது. 

    அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குரங்குகளிடம் இருந்து காப்பாற்றினர். குரங்குகள் தாக்கியதில் அவர்களுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

    தாஜ்மகால் வளாகத்தில் அதிகரித்து வரும் குரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆக்ரா நகராட்சியிடம் பலமுறை முறையிடப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குரங்குகளுக்கு மொத்தமாக ஆண்மை நீக்கம் செய்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என பொதுநல அமைப்பு யோசனையை முன்வைத்தது.

    ஆனால் போதிய நிதிபற்றாக்குறை காரணம் காட்டி பொதுநல அமைப்பின் யோசனையையும் மாநகராட்சி தட்டிகழித்து விட்டது. அதிகரித்துவரும் குரங்குகளின் எண்ணிக்கையால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது தாஜ்மகாலை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #TajMahal
    ×