என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபோதையில் தகராறு - இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டிய ஆட்டோ டிரைவர்
Byமாலை மலர்27 April 2019 12:52 PM GMT (Updated: 27 April 2019 12:52 PM GMT)
ஆட்டோவில் குடி போதையில் தகராறு செய்தவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி மணிமுத்து (36). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தேவாரத்தில் இருந்து மாணிக்கபுரத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதற்காக தேவாரத்தைச் சேர்ந்த கூத்தபெருமாள் என்பவரது ஆட்டோவில் ஏறினர். மணிகண்டன் குடிபோதையில் இருந்தார்.
ஊருக்கு செல்வதற்கு ரூ.500 வாடகை பேசினார். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகு 500 ரூபாய் தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். தான் ஏறிய இடத்திலேயே தன்னை இறக்கி விடுமாறு மணிகண்டன் தகராறு செய்தார்.
இதனால் கூத்தபெருமாள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து கூத்தபெருமாளை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி மணிமுத்து (36). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தேவாரத்தில் இருந்து மாணிக்கபுரத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதற்காக தேவாரத்தைச் சேர்ந்த கூத்தபெருமாள் என்பவரது ஆட்டோவில் ஏறினர். மணிகண்டன் குடிபோதையில் இருந்தார்.
ஊருக்கு செல்வதற்கு ரூ.500 வாடகை பேசினார். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகு 500 ரூபாய் தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். தான் ஏறிய இடத்திலேயே தன்னை இறக்கி விடுமாறு மணிகண்டன் தகராறு செய்தார்.
இதனால் கூத்தபெருமாள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து கூத்தபெருமாளை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X