search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே கனமழையில் இடிந்த கிணற்றின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்
    X

    மேட்டுப்பாளையம் அருகே கனமழையில் இடிந்த கிணற்றின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்

    • சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் பொது கிணறு ஒன்று உள்ளது.
    • கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்காரம் பாளையம் ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் தெக்கலூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இந்த கிணறு இருந்து வந்துள்ளது.

    கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் இருந்து பல ஆண்டுகளாக மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் கயிற்றால் வாளி மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். பிற்காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுத்தனர்.

    இதன்மூலம் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழை காலங்களில் கனமழை காரணமாக இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் கிராமத்தின் நடுவில் உள்ள கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருவோர் தவறி கிணற்றினுள் விழும் நிலை உள்ளதாகவும் அதேபோல் குழந்தைகள், சிறுவர்கள் யாரேனும் இந்த கிணற்றில் விழும் அபாயம் நிலையில் உள்ளது.

    எனவே இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் முன் கிணற்றின் பக்கவாட்டு சுவரை அமைத்து தர வேண்டும் என மாவட்ட, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். இதன்படி ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், வார்டு உறுப்பினர் அமாவாசை ஆகியோர் இது குறித்து பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×