search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது
    • வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை

    வால்பாறை, 

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது,

    வால்பாறை அருகே ரயான் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் சம்பவத்தன்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

    அப்போது தேயிலை தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த காட்டெருமை ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்ததும் வால்பாறை போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பலத்த காயமடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பறவைகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 60). இவர் கடந்த 18-ந் தேதி இரவு மிட்டூரில் இருந்து பறவைகுட்டை நோக்கி சென்றார்.

    அப்போது அவர் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மாசிலாமணியை மீட்டு சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பயனின்றி மாசிலாமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.
    • இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அருர் அருகே உள்ள பொண்ணா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 85).விவசாயி. கடந்த 18-ம் தேதி மொரப்பூர்-கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த கோபால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவருடைய மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம், நவ.21-

    ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 65). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீனிவாசனை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஸ்ரீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோர்ட்டு தீர்ப்பு
    • குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல், நவ.18-

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் (வயது 80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் வந்து விட்டு இரவு வீட் டிற்கு திரும்பி சென்றார். சைமன் காலனி பாலம் அருகில் குறும்பனை சாலை யில் நடந்து செல்லும்போது, குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்த கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் ஞானப்பிரகாசம் மீது மோதி யது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஞானப்பிர காசம் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு அளித் தார்.

    • ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை சண்முகா ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லட்சு மணன் (வயது 61). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளகரை வழியாக நடந்து சென்றார்.

    அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பா க்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு விரைந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் முதியவரை மீட்டனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர்- மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனைகண்டவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் ேபரில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.
    • கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் ஆலு குழி காசியூர் நரியன் தோட் டத்தைச் சேர்ந்தவர் கருப்ப ணகவுண்டர் (வயது 76). இவருக்கு சுப்பாயாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.மேலும் சொந்தமாக 2 மாடு களை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று கருப்பணகவுண்டர் மாடுகளை மேய்த்து விட்டு பின்னர் மாட்டு தொழு வத்திற்கு வரும்போது மாட்டின் கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கோ பியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகி ச்சைக்காக அைழத்து சென்றனர். பின்னர் அங்கு முத லுதவி பெற்று மேல்சிகி ச்சைக்காக ஈரோடு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கரு ப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் மாரிமுத்து (43) கடத்தூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளை யம் காலனியைச் சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலித் தொழி லாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற கொமரன் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதையடுத்து, கருப்ப ம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்ட தால் இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கிக் கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடுகனூரை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது வடுகனூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    இதை அடுத்து அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் சங்கரன் மலையம்பாளையம் போ லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×