search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சி மருந்து குடித்து முதியவர் சாவு
    X

    பூச்சி மருந்து குடித்து முதியவர் சாவு

    • பூச்சி மருந்து குடித்து முதியவர் உயிரிழந்தார்
    • வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (65) இவரது மனைவி ஆரோக்கிய மேரி (60) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். ஞானபிரகாசத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அடிக்கடி வயிற்று வலியில் துடித்து வந்த ஞானபிரகாசம் வலி தாங்காமல் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×