search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oldman suicide"

    • பூச்சி மருந்து குடித்து முதியவர் உயிரிழந்தார்
    • வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (65) இவரது மனைவி ஆரோக்கிய மேரி (60) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். ஞானபிரகாசத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அடிக்கடி வயிற்று வலியில் துடித்து வந்த ஞானபிரகாசம் வலி தாங்காமல் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ரிஷிவந்தியம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள கல்லேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது 65). சம்பவத்தன்று இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கிருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

    மயங்கிய நிலையில் கிடந்த வேலுவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலு, பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சேலத்தில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 73). இவர் அரியானூர் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து குணமடையும் வரை 3 மாத காலமாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்தார். உறவினர்கள் யாரும் அருகில் இருந்து கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அவர் இன்று காலையில் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆட்டையாம் பட்டி போலீசார், சுப்பிரமணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×