search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man dies"

    • ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை சண்முகா ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.
    • கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளை யம் காலனியைச் சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலித் தொழி லாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற கொமரன் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதையடுத்து, கருப்ப ம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்ட தால் இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கிக் கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரமசிவம் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார்.
    • மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் தாழ்வான நிலையில் சென்ற மின்சார கம்பி அறுந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத பரமசிவம் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியை சரிசெய்ய வழியுறுத்தி பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார். என கூறி பரமசிவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மின்சார வாரியத்தை கண்டித்து விருத்தாசலம் - சேலம் சாலையில்  கண்டபங்குறிச்சி எடைபாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்த னர். இதனையடுத்து போலீ சார் இறந்த பரமசி வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வருசநாடு:

    மதுரை மாவட்டம் சேடபட்டி குப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த மொக்கையன்(69). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த சில வருடங்களாக தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள டி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதி க்கப்பட்டது.

    சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த மொக்கையனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி ரோடு செல்லும் வழியில், முருகன் கோவில் பாலம் எதிரில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      சேலம்:

      சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம் பட்டி சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70), தனியாக வசித்து வந்தார். மதுபோதையில் இருந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப் பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதமாக ஏழுமலை இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      • ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
      • தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      சேலம்:

      சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 78). இவர் கடந்த 9-ம் தேதி காலை ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சதாசிவத்தை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதாசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது.
      • பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் ஷேக் கவுஸ் பாஷா பஸ்சிலிருந்து கீழே குதித்தார்.

      கள்ளக்குறிச்சி:

      விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூருக்கு இன்று காலை வந்தது. திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பை கடந்து 5 முனை சந்திப்பு சாலை அருகே வந்தபோது பஸ்சில் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடையில் மோதியது. இதனால் கடையின் முன்பக்கம் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் பாஷா (வயது 60) என்பவர் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். செல்போன் கடையில் வேகமாக மோதிய பஸ் பின்னால் வந்ததுபோது ஷேக் பாஷா மீது மோதி கீழே விழுந்தார். இதில் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சேக் பாஷா இறந்தார். பஸ்மோதி நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.

      அதன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றும் மோதியது. ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி, சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் இறந்த ஷேக் கவுஸ் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் ஆட்டோ மற்றும் தனியார் பஸ் மோதி விபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      • அம்மா உணவகம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
      • அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      சேலம்:

      சேலம் ஆற்றோரம் மார்க்கெட், அம்மா உணவ கம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பல னின்றி கடந்த 2-ந் தேதி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

      இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.
      • வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

      சேலம், ஏப்.25 -

      சேலம் அன்னதானப்பட்டி சேர்ந்தவர் ராஜமன்னார் (வயது 60). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.

      இந்த நிலையில் மகன்கள் இருவரும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜமன்னார், வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

      இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று காலை பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட தயாராக இருந்தது.
      • 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

      கோவை,

      கோவை ரெயில் நிலையத்தில் கடந்த 18-ந் தேதி 5-வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில் முன்பு படுத்துக்கொண்டார். பின்னர் ரெயில் புறப்பட்டபோது ரெயிலில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×