search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
    X

    சேலத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

    • ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 78). இவர் கடந்த 9-ம் தேதி காலை ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சதாசிவத்தை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதாசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×