search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் விஷம் குடித்த முதியவர் சாவு
    X

    சேலத்தில் விஷம் குடித்த முதியவர் சாவு

      சேலம்:

      சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம் பட்டி சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70), தனியாக வசித்து வந்தார். மதுபோதையில் இருந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப் பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதமாக ஏழுமலை இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      Next Story
      ×