என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் முதியவர் பலி
- வேலு மீது அந்த வழியாக வந்த கார் ேமாதியது.
- சிகிச்சை பலனளிக்காமல் வேலு பரிதாபமாக இறந்தார்.
கோவை,
கோவை சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 76). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதியவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






