search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் முதியவர் தின்னர் குடித்து சாவு
    X

    சேலத்தில் முதியவர் தின்னர் குடித்து சாவு

    • ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.
    • வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம், ஏப்.25 -

    சேலம் அன்னதானப்பட்டி சேர்ந்தவர் ராஜமன்னார் (வயது 60). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.

    இந்த நிலையில் மகன்கள் இருவரும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜமன்னார், வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று காலை பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×