என் மலர்
நீங்கள் தேடியது "falling into the well"
- கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
- இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் அண்ணா மலை கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (யது 70). இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பொன்னு சாமி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் உறவி னர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.
அப்போது அண்ணா மலை கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே பொன்னுசாமியின் செருப்பு மற்றும் லுங்கி கிடந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த உறவி னர்கள் இது குறித்து கொடு முடி தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் பொன்னுசாமி குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பொன்னுசாமி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
- சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த குழியூரை சேர்ந்தவர் சேகர்.
இவரும் இவரது மகன் ஹரிஹரனும் அட்டக்கல்லூ ரில் உள்ள மாச நாயக்கர் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த சேகர் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழு ந்தார்.
சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.
சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






