search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The worker died after"

    • சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
    • சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த குழியூரை சேர்ந்தவர் சேகர்.

    இவரும் இவரது மகன் ஹரிஹரனும் அட்டக்கல்லூ ரில் உள்ள மாச நாயக்கர் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

    கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த சேகர் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழு ந்தார்.

    சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.

    சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பழனிசாமி மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் பழனி சாமி (வயது 43). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    பழனிசாமி கட்டிட கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக காலில் புண் ஏற்பட்டு அவதி பட்டு வந்ததாகவும், கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பழனிசாமிக்கு குடி பழக்கமும் இருந்ததாகவும், இதனால் சரியாக சாப்பிடாமல் வேலைக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பழனி சாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் அவரது மனைவி பிரியா கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் பழனிசாமி அவர் வழக்கமாக சாப்பிடும் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு விட்டு மயங்கி கடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×