search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taking too many pills"

    • கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(54). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலிங்கம் கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.

    அவர் சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது தம்பி குமார், மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிசாமி மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் பழனி சாமி (வயது 43). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    பழனிசாமி கட்டிட கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக காலில் புண் ஏற்பட்டு அவதி பட்டு வந்ததாகவும், கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பழனிசாமிக்கு குடி பழக்கமும் இருந்ததாகவும், இதனால் சரியாக சாப்பிடாமல் வேலைக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பழனி சாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் அவரது மனைவி பிரியா கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் பழனிசாமி அவர் வழக்கமாக சாப்பிடும் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு விட்டு மயங்கி கடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×