search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    • இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழ கத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவ லாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த அதாவது அடுத்த மாதம் அக்டோபர் 1-ந் தேதி திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட் டியே செப்டம்பர் 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் தில் நடப்பாண்டு 2022-2023-ல் கன்னிப்பூ கொள்முதல் பருவத்தில் தற்சமயம் 7 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன. இதனை விவசா யிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்ய லாம். நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடோ, புகாரோ இருப்பின் நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், கட்டுப்பாடு அறை எண்கள் 04652 261214, மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் எண் 9154154598 ஆகியவற்றில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் புகார் தெரிவிக்கலாம். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு செய்யப்படும். அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சிறு தொழில் மையம், கோணம், நாகர்கோவில்-4 அலுவலக தொலைபேசி எண்.04652-251214-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • குறுவை நெல் அறுவடையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
    • விவசாயிகள் தங்களது நெல்லை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் அடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 2022-23-ம் ஆண்டு குறுவை நெல் அறுவடையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள்
    வாணிகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

    பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் குறுவை பருவத்திற்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு அறிவித்துள்ளபடி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2060-ம், மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.100-ம் என மொத்தம் ரூ.2160 வழங்கப்படும்.

    அதேபோல் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2040-ம், ஊக்கத்தொகை ரூ.75-ம் என மொத்தம் ரூ.2115 வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களது நெல்லை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×