என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடி அருகே கிணற்றில் ஆண் சடலம்
- சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது.
- திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது.
புளியங்குடி:
புளியங்குடி சங்கரன்கோவில் சாலை அருகே உள்ள சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிணற்றில் விழுந்து இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எதற்காக புளியங்குடி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்