search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vietnam"

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார். #TrumpKimMeet #NorthKoreanLeader
    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.
     
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

    இதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமில் நடக்கலாம் எனவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் பரவலாக பேசப்பட்டது.



    இந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் தேதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார். பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.

    மேலும், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார். #TrumpKimMeet #NorthKoreanLeader
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. #DonaldTrump #KimJongUn #Vietnam
    டோக்கியோ:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.

    அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.

    எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

    புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.

    அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

    அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

    அந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.

    வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #DonaldTrump #KimJongUn #Vietnam
    வியட்நாம் வந்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit
    ஹனோய்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.



    இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இன்று வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, வேளாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    இருநாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியாவும், வியட்நாமும் இனி தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் இந்த சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தினர்.

    இன்றைய பேச்சுவார்த்தையின்போது தலையெடுத்து வரும் பயங்ரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பது எனவும் அவர்கள் உறுதியேற்றனர். வியட்நாம் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பின்னர் ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்டார்.

    தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

    வியட்நாம் ராணுவத்துக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கவும், வியட்நாம் கடலோர எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிவிரைவு படகுகளை தயாரிக்க இந்தியா 10 கோடி டாலர்கள் கடன் உதவி அளிக்கும் எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

    இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 128 கோடி அமெரிக்க டாலர்களாக ஏறுமுகம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொகை 150 கோடி டாலர்களாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit 
    வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஹனோய் நகரில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். #RamNathKovind #Vietnam #VietnamNationalAssembly
    ஹனோய்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம்  மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

    நாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.



    இந்நிலையில், தனது பயணத்தின் 3ஆம் நாளான இன்று ஹனோய் நகருக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். அவரை  தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகான் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து ஹனோயில் உள்ள போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய சபையில் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். #RamNathKovind #Vietnam #VietnamNationalAssembly
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு வார காலமாக அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்கிறார். #RamnathKovind ##Vietnam #Australia
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருவார கால அரசுமுறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    நவம்பர் 21ம் தேதி வியட்நாமில் இருந்து புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியா செல்கிறார். அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்திக்கிறார்.

    மேலும், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பாராமட்டா பகுதியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. #RamnathKovind ##Vietnam #Australia
    வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான குயேன் பு டிராங் இன்று பதவி ஏற்றார். #NguyenPhuTrong #Vietnampresident
    ஹனோய்:

    தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் தெற்கு சீனக் கடல் பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள அழகிய நாடு வியட்நாம். இந்த நாட்டின் ஆட்சி முறையில் ஒருநபர் அதிகாரம் என்பது கிடையாது.

    அதிபர், பிரதமர், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என இந்த நான்கு தரப்பினரின் கைகளிலும் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.

    வியட்நாம் நாட்டின் அதிபராக பதவி வகித்த டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதைதொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் இன்று தேர்வு செய்யப்பட்ட ந்குயேன் ஃபு டிராங்(74) வியட்நாம் புதிய அதிபராக பதவி ஏற்று கொண்டார்.

    கம்யூனிச சித்தாந்தத்தில் அதிக பிடிப்புள்ள ந்குயேன் ஃபு டிராங், கடந்த 1997-ம் ஆண்டில் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரானார். 2011-ம் ஆண்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டில் அவரது பதவிக்காலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

    வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரும் முன்னாள் அதிபருமான ஹோ சி மின்ஹ் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், அதிபர் பதவியையும் ஒருசேர வகிப்பவர் ந்குயேன் ஃபு டிராங் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. #NguyenPhuTrong #Vietnampresident
    வியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Vietnam #PresidentTranDaiQuang #RIPTranDaiQuang
    ஹனோய்:

    வியட்நாம் நாட்டின் ராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அந்நாட்டின் அதிபர் ட்ரான் டாய் குவாங். இவர் தனது உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதான அதிபர் ட்ரான் டாய் குவாங் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவிவகித்து வந்தார்.

    வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார்.

    இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் மந்திரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vietnam #PresidentTranDaiQuang #RIPTranDaiQuang
    வியட்நாமில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட 7 பேர் பலியான நிலையில், மேலும் 5 பேர் கோமாவில் உள்ளனர். #Vietnam
    ஹனோய்:

    வியட்நாம் தலைநகர் ஹனோயில் தொடர் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று, இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திடீரென மயங்கி விழ அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகளவில் போதை மருந்து உட்கொண்டதன் காரணமாக அவர்கள் மயங்கியதாக கூறப்பட்டது.

    சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சுயநினைவு இன்றி கோமாவில் உள்ளனர். இதனை அடுத்து, இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
    அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாமை தொடர்ந்து 29-ம் தேதி (நாளை) கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில், இன்று வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வியட்நாம் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோருக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
    வியட்நாமில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், எதிர்பாராத சந்திப்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார்.

    இங்கு இரண்டு நாட்கள் இருந்து ஆலோசனை மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, 29-ம் தேதி கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.



    இந்நிலையில், வியட்நாமில் இருக்கும் சுஷ்மா சுவராஜ் எதிர்பாராத விதமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பை அடுத்து, இருவரும் இருநாடுகளின் உறவு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரும் 27 முதல் 30-ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #Sushma #Vietnamvisit #Cambodiavisit
    புதுடெல்லி:

    ஆசியான் அமைப்பில் உள்ள நேசநாடான வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வரும் 27-ம் தேதி வியட்நாம் நாட்டுக்கு பயணமாகிறார்.

    இந்த பயணத்தின்போது,  இருநாட்கள்  வியட்நாமில் தங்கியிருக்கும் சுஷ்மா, இந்திய பெருங்கடல்சார்ந்த மாநாட்டின் மூன்றாவது அமர்வை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் பிரதமர்  நுகுயென் க்சுவான் ஃபுக்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அங்கிருந்து 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராக் சோக்ஹான், கம்போடியா பிரதமர் ஹூன் சென் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சேய் சும் ஆகியோரை சந்தித்து இந்தியா - கம்போடியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Sushma #Vietnamvisit  #Cambodiavisit
    வியட்னாமில் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த மணமகன் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். #Vietnam #BusAccident
    ஹனோய்:

    வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Vietnam #BusAccident
    ×