search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்தம்"

    • சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
    • சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் சீனா-மாலத்தீவு இடையே புதிய இரண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
    • காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.

    குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன்.
    • ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஸ்பெயினின் தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற் கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.

    நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும்.

    இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

    இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    • சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான மோதல் போக்கு நல்லதல்ல என அறிவுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக முகமது முய்சு பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் முன்முயற்சியானது. இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது. சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலத்தீவின் இலக்குகளை அடைய சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார். மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு. வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயல்படும் நாடாக மாலத்தீவை மாற்ற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.
    • விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஆண்டு தோறும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் முழுவதும் இருந்து அவர்கள் அங்கு சென்று தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

    இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.

    வெளியுறவு துறை இணை மந்திரி முரளீதரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரகளுக்கான இணை மந்திரி ஸ்மிருதிஇராணி ஆகியோர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

    சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துறை மந்திரி டாக்டர் தவ்பீக் பின் பஸ்வான் அல் ரபியாவை அவர்கள் சந்திப்பார்கள். விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    • தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.
    • கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஓட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் ராமு ஜிஜேந்திரன் (ஜி ஜி), தனது தொழில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். நிகழ்ச்சியில் எம். எல். ஏ.க்கள்

    வரலட்சுமி மதுசூதனன், மு.பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உதவி இயக்குனர் கார்த்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது.

    மாலத்தீவு:

    மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இது தொடர்பாக அதிபர் அலுவலகத்தின் பொது கொள்கைக்கான துணை செயலாளர் முகமது பிர்ஸூல் அப்துல் கலீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். அவர்களை திரும்ப அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் முகமது மூயிஸ் தொடங்கி உள்ளார்.

    இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாலத்தீவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018 வரை அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தார். அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார், அதன் பின்னர் வந்த முகமது கோலி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். இந்த சூழ்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக இருப்பார் என கருதப்படுகிறது.

    • அல்ஷிபா கல்லூரி முதல்வர் பாபு, பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் கூட்டாக ைகயெழுத்திட்டனர்.

    ஊட்டி,

    பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் ஆங்கில இலக்கியம் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையும், பெருந்தல்மன்னா அல்ஷிபா கல்லூரியும் இணைந்து மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, ஆசிரியர்-மாணவர் பரிமாற்றம் ஆய்வு நூல் வெளியீடு உள்ளிட்ட கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்லூரி சார்பாக கையெழுத்திட்டது.

    அல்ஷிபா கல்லூரி முதல்வர் பாபு, பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் கூட்டாக ைகயெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் உள்தர மதிப்பீட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் மிதுலஜ், துறை தலைவர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    சிவகாசி

    திண்டுக்கல்லில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை மற்றும் திண்டுக்கல் பார்வதி கல்லூரி வணிகவி யல் துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.

    பார்வதி கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுரு கன், வணிகவியல் துறை தலைவர் குருசாமி, திண்டுக்கல் கல்லூரி முதல்வர் சுகுமார், வணிகவியல் துறை தலைவர் வனிதா ராணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    இதற்கான ஏற்பாடுகளை காளீஸ்வரி கல்லூரி பேராசிரியர் பாபு பிராங்க ளின் செய்திருந்தார்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
    • ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோவும், கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் சீனிவாசன் கலைக்கல்லூரியும், ஜப்பான் காக்னவி பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு,தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சீனிவாசன் முன்னிலையில் ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோவும், கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.பின்னர் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், இக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் யாரும் வேலை தேடி அலையக் கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வைத்துக் கொண்டு உங்களின் முன்னே ற்றத்திற்கு முதல் படியை ஏற்படுத்தித் தருகிறோம். அதை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்தி முன்னேறவேண்டும். இந்த நிறுவனத்துடன் கல்லூரி வைத்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாணவர்களுடைய அறிவுத்திறன்களை பரிசோதித்து அதை மேம்படுத்துவதில் முதன்மை பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.தொடர்ந்து ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோ பேசுகையில், மாணவர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, மாணவர்களின் திறனை வளர்க்கும் பொருட்டு மொழி திறன் பயிற்சி அளித்தல், வேலை வாய்ப்பு வழங்குதல் பற்றி எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினர் பெங்கர் காக்னவி மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் வரு ண்மோட்கில் மேலாண்மை மூத்த மேலாளர் மஞ்சுநாத் ரோடகி , பிராங்களின் ஜெகதீசன் பொறியியல் கல்லூரி இளங்கோவன், திறன் மேம்பாட்டு அலுவலர் சசிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக சீனிவாசன் கலைக்கல்லூரி மனித வள மேம்பாட்டு அலுவலர் சந்திரசவுத்ரி வரவேற்றார். வணிக மேலாண்மையியல் துறை இயக்குநர் மகேஷ் நன்றி கூறினார்.

    • தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.
    • இ-சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    சென்னை:

    அரசு அலுவலகங்களை, மாநில தரவு மையத்துடன் இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.சி.எஸ் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இ.சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.

    இப்போது இதன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் டி.சி.எஸ்.நிறு வனத்துக்கு மேலும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ.12.56 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
    • நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.

    அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.

    ×